செய்திகள் :

``செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம்; நெருக்கடியான காலங்களில்'' - சசிகலா

post image

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகியோர் விலகல், இரண்டு நாள்களுக்கு முன்பு தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளை அழைத்து அமித் ஷா திடீர் ஆலோசனை நடத்தியதன் பின்னணி, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி விவகாரம் பரபரப்பாக உள்ளது.

இது போதாதென்று, தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கூட்டங்களைத் தவிர்ப்பது, டெல்லிக்கு தனியாகச் சென்று நிர்மலா சீதாராமனைச் சந்திப்பது என வெளிப்படையாகச் செயல்பட்டு வந்த அ.தி.மு.க. மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், செப்டம்பர் 5-ம் தேதி மனம் திறந்து பேசப்போவதாக சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

அதன்படி, ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் தனது அலுவலகத்தின் முன்பு செய்தியாளர்களை இன்று சந்தித்த செங்கோட்டையன்,

"கட்சியைவிட்டு வெளியே சென்றவர்களை மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் அடுத்த 10 நாள்களுக்குள் மீண்டும் சேர்த்து அ.தி.மு.க-வை ஒன்றிணைக்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் கூட குறிப்பிடாமல் கெடு விதித்தார்.

மேலும், "அ.தி.மு.க ஒருங்கிணைந்தால்தான் நான் முழுமையாக சுற்றுப்பயணம், தேர்தல் பணிகளில் இறங்கி பணியாற்றுவேன்." என்று செங்கோட்டையன் எச்சரிக்கையும் விடுத்தார்.

இந்த நிலையில், செங்கோட்டையனின் இத்தகைய கருத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சசிகலா, "அ.தி.மு.க எந்த சக்தியாலும் அழிக்க முடியாத பேரியக்கம் என்பதைக் கழக மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்திருக்கிறார்.

பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் செங்கோட்டையன் உடன் இருந்தவர். தனது உடம்பில் ஓடுவது அ.தி.மு.க-வின் ரத்தம்தான் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார்.

கழகம் ஒன்றுபட செங்கோட்டையனின் கருத்துதான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து. தமிழக மக்களின் கருத்தும் இதுதான், நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.

சசிகலா
சசிகலா

செங்கோட்டையனைப் போன்ற உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை தி.மு.க என்ற தீய சக்தி எந்த விதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடாக ஈடேறாது.

தி.மு.க-வின் சதித்திட்டத்தை முறியடித்திட கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது.

இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது. எனவே தி.மு.க என்ற தீய சக்தி, நம் கழகம் ஒன்றுபட எப்படியெல்லாம் தடை போட்டு தடுத்தாலும், அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி கழகம் மீண்டும் அதே மிடுக்கோடும் செருக்கோடும் மிளிரும்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. ஒன்றுபட்ட வலிமைமிக்க அ.தி.மு.கதான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வழி வகை செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான பயிற்சியையும், ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை கொண்டு வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்... மேலும் பார்க்க

``எடப்பாடி தலைமையை ஏற்க முடியாது; அது தற்கொலைக்கு சமம்'' – தொடர்ந்து விமர்சிக்கும் டிடிவி தினகரன்

"ஓபிஎஸ்-சும் நானும் கூட்டணியில் இருந்து வெளியேறக் காரணம் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுதான்" என்று மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டம... மேலும் பார்க்க

``ஆமை புகுந்த வீடும், பா.ஜ.க நுழைந்த மாநிலமும் உருப்படாது'' - ப.சிதம்பரம் காட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டியில் காங்கிரஸ் கட்சி புதிய அலுவலக கட்டட திறப்பு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு:"... மேலும் பார்க்க

Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் வாக்கிங் போகலாமா, உடற்பயிற்சி செய்யலாமா?

Doctor Vikatan:மூட்டுவலி (Arthritis) உள்ளவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா, எந்த வகையான உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். வாக்கிங் செய்யலாமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர்... மேலும் பார்க்க

பதவி பறிப்பு மசோதா: ``INDIA கூட்டணியில் அதிக குற்றப்பின்னணி இருக்கும் கட்சி திமுக'' - ADR அறிக்கை

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி அரசு, நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் பதவி நீக்க மசோதாவை அறிமுகப்படுத்தியது.அதில், “ஓர் அமைச்சர் பதவியில் இருக்கும்போது, ஐந்து ... மேலும் பார்க்க

ஆரோக்கியம் தருவது சைவமா; அசைவமா? - மருத்துவர் சொல்வதென்ன?

சாப்பாடு என்றாலே நம் எல்லோருடைய மனதிற்குள்ளும் அப்படியொரு சந்தோஷம் வரும். அது பசிக்கும்போது வீட்டில் அம்மா தன் கையால் பரிமாறும் சாம்பார் சாதமாக இருந்தாலும் சரி, நண்பர்களுடன் சுடச்சுட பிரியாணி சாப்பிடு... மேலும் பார்க்க