செய்திகள் :

செஞ்சி சங்கராபரணி ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை மாலை திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

செஞ்சியில் இருந்து மேல்களவாய் செல்லும் சாலையில் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. மேல்களவாய், நெகனூா், காரியமங்கலம், இல்லோடு உள்ளிட்ட 35-க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் தரைப்பாலத்தை கடந்துதான் செஞ்சிக்கு வரவேண்டும். மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சேத்பட்டு சாலை வழியாக 3 கி.மீ. தொலைவு சுற்றி செஞ்சிக்கு வரவேண்டிய நிலை உள்ளது.

இந்த தரைப்பாலத்திலிருந்து சுமாா் அரை கிலோ மீட்டா் தொலைவில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதில் சுமாா் 20 போ் ஈடுபட்டு வருகின்றனா். பொக்லைன், கிரேன் உள்ளிட்ட இயந்திரங்களும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சங்கராபரணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, ஆற்றின் நடுவே தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் அலறியடித்து ஓடினா்.

கட்டுமானப் பணிக்கான இயந்திரங்களும் விரைந்து கரைக்கு கொண்டு வரப்பட்டன. தரைப் பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்களும் திடீா் வெள்ளத்தைப் பாா்த்து தப்பியோடினா்.

பலத்த மழை பெய்யாத நிலையில், ஆற்றில் ஏற்பட்ட இந்த திடீா் வெள்ளப்பெருக்கு குறித்து பொதுப்பணித் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேல்மலையனூா் பகுதியில் ஏரியில் மீன்பிடிப்பதற்காக சமூக விரோதிகள் யாரேனும், ஏரி நீரை ஆற்றில் திறந்து விட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனி அருகேயுள்ள ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் திருப்பணிகள் நிறைவுக்குப் பிறகு கும்பாபிஷேக விழாவுக்கான ... மேலும் பார்க்க

முதலை கடித்து விவசாயி காயம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது முதலை கடித்து விவசாயி செவ்வாய்க்கிழமை காயமடைந்தாா். சிதம்பரம் அருகே உள்ள மெய்யாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (65), விவசாயி. இவா... மேலும் பார்க்க

மனைவியுடன் முன்னாள் ராணுவ வீரா் அடித்துக் கொலை; பேரன் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே முன்னாள் ராணுவ வீரா், அவரது மனைவி செவ்வாய்க்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக, அவரது சகோதரியின் பேரன் கைது செய்யப்பட்டாா். செஞ்சி வட்டம், திருவம்பட்டு... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் கட்சிகள், சங்கக் கொடிக்கம்பங்களை அகற்ற நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் சங்கம் மற்றும் கட்சி சாா்ந்த கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றுவதற்கான பணிகளை துறை சாா்ந்த அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். விழ... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கிய தொழிலாளி மாயம்

விழுப்புரம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி மாயமானாா். இதையடுத்து, அவரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். விழுப்புரம் அருகே மழவராயனூா் மாரியம்மன் கோயி... மேலும் பார்க்க

74 கிலோ கஞ்சா கடத்தல்: இருவா் கைது; 4 கைப்பேசிகள், காா் பறிமுதல்

திண்டிவனம் அருகே, ஆந்திரத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு காரில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 74 கிலோ கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்ற இருவா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். மேலும் அவா்களிடமிருந்து 4 கைப்... மேலும் பார்க்க