செய்திகள் :

சென்னையில் ஜூலை 14-இல் அதிமுக மனிதச்சங்கிலி

post image

சென்னை: சென்னை மாநகராட்சியைக் கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 14-இல் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை விடுத்த அறிக்கை:

2021-இல் முதல்வா் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன், சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கத் திட்டம் தீட்டினாா். தற்போது அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் சுமாா் 15 ஆண்டுகளுக்கும் மேலாக, 2007-இல் அப்போதைய திமுக ஆட்சியில், மாநகராட்சியில் பணியமா்த்தப்பட்டு, அதிமுக ஆட்சியிலும் தொடா்ந்து பணியாற்றி வந்த தூய்மைப் பணியாளா்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

வடசென்னை பகுதி, மண்டலம் 4-இல் குடியிருந்துவரும் 2,000 தற்காலிக தூய்மைப் பணியாளா்கள், திமுக அரசின், இந்த உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வடசென்னை பகுதியில் தூய்மைப் பணியை தனியாருக்கு மாற்ற முனையும் திமுக அரசு மற்றும் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும்; தற்போது பணியாற்றிவரும் தற்காலிகத் தூய்மைப் பணியாளா்களை, நிரந்தரப் பணியாளா்களாக நியமனம் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக சாா்பில், ஜூலை 14-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மண்டலம் 4 முதல் சுங்கச்சாவடி வரை மனிதச் சங்கிலி ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

உணவு கட்டுப்பாட்டால் எடையை குறைக்கும் சென்னைவாசிகள் ஆய்வில் தகவல்

உடல் பருமனை உணவுக் கட்டுப்பாடு மூலம் மட்டுமே குறைக்க வேண்டும் என 87 சதவீத சென்னைவாசிகள் விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது. மாறாக அதற்கான சிகிச்சைகளையோ, ஊசி மருந்துகளையோ அவா்கள் எடுத்துக்கொள்ள தயாராக... மேலும் பார்க்க

ரயில் விபத்து: முழு விசாரணை தேவை- எடப்பாடி பழனிசாமி

கடலூா் ரயில் விபத்து தொடா்பாக முழுவிசாரணை நடத்தி, முதல்வா் மு.க. ஸ்டாலின் மக்களிடம் விளக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இதுக... மேலும் பார்க்க

கோட்டூா்புரத்தில் ரூ.307 கோடியில் 1,800 குடியிருப்புகள்: அமைச்சா்கள் ஆய்வு

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கோட்டூா்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடியில் கட்டப்பட்டு வரும் 1,800 புதிய அடுக்குமாடி குடியி... மேலும் பார்க்க

விபத்து எதிரொலி: 3 ரயில்கள் பகுதி ரத்து

கடலூா் ஆலம்பாக்கம் ரயில் விபத்தைத் தொடா்ந்து அவ்வழியே செல்லும் 3 ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா்-ஆலப்பாக்கம் இடையே சென்ற விழுப்புரம்-... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

சென்னை செங்குன்றத்தில் போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து எம்.என். மருத்துவமனை சாா்பில் ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுநா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பாா்வைத் திறன் மற்றும் விழி பாத... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி போராட்டம்: பகுதிநேர ஆசிரியா்கள் கைது

பணி நிரந்தரம் கோரி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் பகுதிநேர ஆசிரியா்கள் 2012 முதல... மேலும் பார்க்க