செய்திகள் :

சென்னையில் 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

post image

சென்னை - தில்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத் - லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து தொடர்ச்சியாக நாடு முழுவதும் பல்வேறு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இன்று(புதன்கிழமை) தில்லியில் இருந்து 4.15 மணிக்கு சென்னைக்கு புறப்படவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல இன்று இரவு சென்னையில் இருந்து இரவு 8.40 மணிக்கு தில்லிக்கு புறப்படவிருந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். விமானப் பயணம் குறித்த தகவல் வெளிப்படையாக இல்லை என்று பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நிர்வாகக் காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் விமானக் கட்டணம் பயணிகளுக்கு திருப்பி அளிக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்பட்டது. சௌதி அரேபியா தம்மமில் இருந்து வரும் விமானம் தாமதமாக வந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஏர் இந்தியா விமான விபத்துக்கு அதிக எடை காரணம்? - முன்னாள் விமானி அதிர்ச்சி கருத்து!

பெட்ரோல் நிலையங்களிலுள்ள கழிப்பறைகள் யாருக்கானவை? கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பெட்ரோல் நிலையங்களிலுள்ள கழிப்பறைகள் மக்களின் பயன்பாட்டிற்கானவை அல்ல என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பெட்ரோல் நிலையங்களிலுள்ள கழிப்பறைகளை பொது பயன்பா... மேலும் பார்க்க

குரோஷியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

கனடாவில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு குரோஷியாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் ஆன்ட்ரேஜ் பிளன்கோவிக், விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்று அதிகாரிகளை ஒவ்வொருவ... மேலும் பார்க்க

ஒரே நாளில் ஏர் இந்தியாவின் 3 சர்வதேச விமானங்கள் ரத்து!

ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான 3 சர்வதேச விமானங்களின் பயணங்கள் பல்வேறு காரணங்களினால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான 3 விமானங்களின் சர்வதேச பயணங்கள், தொழில்ந... மேலும் பார்க்க

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹைதரபாத்திலுள்ள பேகம்பேட் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அது போலியானது என உறுதியாகியுள்ளது. பேகம்பேட் விமான நிலையத்தின் வளாகத்தினுள் வெ... மேலும் பார்க்க

கரோனா பரவல்: மகாராஷ்டிரத்தில் 61 புதிய பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 61 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது கரோனா தொற்றானது மீண்டும் பரவி ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் நக்சல் முகாம் தகர்ப்பு! வெடிகுண்டுகள் பறிமுதல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருந்த நக்சல்களின் முகாம் தகர்க்கப்பட்டு 14 நவீன வெடிகுண்டுகள் மற்றும் 50 கிலோ அளவிலான வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு சிங்பம் மாவட்டத்தின் சிட்பில் கிர... மேலும் பார்க்க