செய்திகள் :

சென்னை: வீட்டு ஓனரிடம் ரூ.97 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஃபைனான்ஸியர் கைது; பின்னணி என்ன?

post image

சென்னை பெரம்பூர் ராஜவேலு தெருவில் வசித்து வருபவர் ஹேமமாலினி (56). இவருக்குச் சொந்தமாக காரப்பாக்கம் தென்றல் நகரில் வீடு உள்ளது.

அந்த வீட்டை சுபாஷ் சந்த் ஜெயின் என்பவரிடம் அடமானம் வைத்து 50 லட்சம் ரூபாயை வட்டிக்கு வாங்கியிருந்தார் ஹேமமாலினி.

பின்னர் பணத்தேவைக்காக அந்தக் குடியிருப்பை ஹேமமாலினி விற்க முடிவு செய்தபோது, அந்த வீட்டை சுபாஷ் சந்த் ஜெயினை வாங்கிக் கொள்வதாகக் கூறியிருக்கிறார்.

கைது
கைது

இதையடுத்து அந்த வீட்டின் விலை 1.6 கோடி ரூபாய் எனப் பேசி முடிக்கப்பட்டுள்ளது. தன்னிடம் ஹேமமாலினி வாங்கிய கடன், அதற்குரிய வட்டி எனக் கணக்கு பார்த்த சுபாஷ் சந்த் ஜெயின், 97 லட்சம் ரூபாயைக் கொடுத்து வீட்டை வாங்கிக் கொள்வதாக ஹேமமாலினியிடம் உறுதி அளித்திருக்கிறார்.

அதன்படி கடந்த 2024-ம் ஆண்டு நீலாங்கரை சார் பதிவாளர் அலுவலகத்தில் வீட்டை சுபாஷ் சந்த் ஜெயினின் மனைவி பெயருக்கு ஹேமமாலினி கிரையம் செய்து கொடுத்திருக்கிறார்.

ஆனால் வாக்குறுதி அளித்தபடி 97 லட்சம் ரூபாயை சுபாஷ் சந்த் ஜெயின், ஹேமமாலினியிடம் கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கிறார்.

ஃபைனான்ஸியர் சுபாஷ் சந்த் ஜெயின்
ஃபைனான்ஸியர் சுபாஷ் சந்த் ஜெயின்

இதுதொடர்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் ஹேமமாலினி புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி அயனாவரத்தைச் சேர்ந்த ஃபைனான்ஸியர் சுபாஷ் சந்த் ஜெயினைக் கைது செய்தனர்.

அவரிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் இவர் மீது ஏற்கெனவே சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவில் கந்துவட்டி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுபாஷ் சந்த் ஜெயின் சிறையில் அடைக்கப்பட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

20 ஆண்டுகளில் பாலியல் கொடுமைக்கு இரையான 299 பேர்... பிரான்ஸை அதிரவைத்த ஓய்வுபெற்ற மருத்துவர்!

கடந்த 20 வருடங்களில் சிறுமிகள், பெண்கள் என 299 பேரை பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஓய்வுபெற்ற மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ராய... மேலும் பார்க்க

மண்ணில் புதைக்கப்பட்ட ஏலக்காய் மூடைகள்; இலங்கைக்கு கடத்த முயன்ற தந்தை - மகனுக்கு போலீஸ் வலை!

கடந்த சில ஆண்டுகளாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து போதைப்பொருள்கள், கஞ்சா, கடல் அட்டை போன்றவை இலங்கைக்கு கள்ளத்தனமாக கடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தும் விராலி மஞ்சள்,... மேலும் பார்க்க

தூத்துக்குடி: நிலத்தைக் கேட்டு பெண்ணிற்குக் கொலை மிரட்டல்; திமுக எம்எல்ஏ-வின் சகோதரர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ., சண்முகையா. இவரது உடன்பிறந்த சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன்.தொழிலதிபரான இவர் முன்னாள் அ.தி.மு.க பிரமுகர். முருகேசன் ஓட்டப்... மேலும் பார்க்க

`தொழிலதிபரிடம் லஞ்சம்' - அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்த சிபிஐ; சிக்கியது எப்படி?

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அமலாக்கத் துறையின் இணை இயக்குநர் சிந்தன் ரகுவம்சி. இவர் தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயன்றபோது சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வெளியான செய்தியில், சுரங்... மேலும் பார்க்க

புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய போலீஸ் - தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு பறந்த புகார்

புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்கு தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்திரு... மேலும் பார்க்க

Kerala: பழங்குடி இளைஞரின் ஆடைகளை கழற்றி கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம்.. நடந்தது என்ன?

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் சிஜூ (20) என்பவரின் ஆடைகளை கழற்றி மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக புகார் எழுந்தது. கடந்த 24-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடிய... மேலும் பார்க்க