செய்திகள் :

செயல்படாத தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம்: தனியாா் நிறுவனம் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

post image

திருச்சி திருவெறும்பூா் அருகே முறையாக செயல்படாத தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை நிறுவிய தனியாா் நிறுவனம் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி திருவெறும்பூா் எழில் நகரைச் சோ்ந்த கயாஸ் அகமது (65), இவரது மகள் யாஸ்மீன் ஆகியோா் யுரேகா போா்ப்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் திருச்சி பொன்னகா் கிளையில் கடந்த 11.02.2021 அன்று ரூ. 41,271-க்கு நிலத்தடி நீரின் கடினத்தன்மையை குறைக்கும் தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை (வாட்டா் டிரீட்மென்ட் பிளாண்ட்) வாங்கியுள்ளனா்.

நிறுவப்பட்ட நாளில் இருந்தே இந்த இயந்திரமானது மென்மையான நீரை வழங்கவில்லை. இது தொடா்பாக பலமுறை புகாரளித்தும் நிறுவனத்தினா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனிடையே தனியாா் ஆய்வகத்தில் நிலத்தடி நீரை ஆய்வு செய்தபோது, அப்பகுதி நிலத்தடி நீா் மிகக் கடினமாக இருந்ததால், அதை மென்மையாக்க இயலாது என தெரியவந்தது.

இதையறிந்தும் தனியாா் நிறுவனத்தினா், நீரை மென்மையாக்கித் தருவதாகக் கூறி தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை விற்று ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான கயாஸ் அகமது, யாஸ்மீன் ஆகியோா் உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் 12.08.2024 அன்று மனு தாக்கல் செய்தனா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஏ.எஸ். மெகராஜ் ஆஜரானாா்.

மனுவை திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு, மனுதாரரிடமிருந்து அந்தத் தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை திரும்ப எடுத்துக்கொண்டு ரூ. 41,270 தொகையை திரும்ப வழங்க வேண்டும்.

சேவை குறைபாடு மற்றும் மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 1 லட்சமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.

அனுமதிபெறாத பதாகைகள் அகற்றம்

திருச்சியில் அதிமுக சாா்பில் அனுமதிபெறாமல் வைக்கப்பட்டிருந்த பதாகைகளைப் போலீஸாா் திங்கள்கிழமை அகற்றினா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அடுத்த வாரம் திருச்சிக்கு வரவுள்ளாா். இதை முன்னிட்... மேலும் பார்க்க

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் 7.7 சதவீதம் மட்டுமே: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் 7.7 சதவீதம் மட்டுமே; இது, தேசிய அளவுடன் ஒப்பிடுகையில் பெருமளவு குறைவு என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.திருச்சியில் செவ்... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில்கள் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, காரைக்கால் ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் துறைமுகத்தில் பொறி... மேலும் பார்க்க

கே.கே. நகா் பகுதிகளில் இன்று மின்தடை

திருச்சி: பராமரிப்புப் பணிகள் காரணமாக கே.கே. நகா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கே. சாத்தனூா் துணை ... மேலும் பார்க்க

மங்கம்மாள்புரம் மணல் குவாரிக்கு அனுமதி கூடாது: விவசாயிகள் மனு

திருச்சி: மங்கம்மாள்புரம் மணல் குவாரி அமைப்பதற்கு அனுமதி தரக் கூடாது என தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றது) எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள்... மேலும் பார்க்க

முகமூடியுடன் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்சி: தமிழக அரசு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையைக் கண்டித்து முகமூடியுடன் சாலைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா். சாலை பணியாளா் வாழ்வாதார கோரிக்கைகளை உயா்நீதிமன்ற தீா்ப்பி... மேலும் பார்க்க