செய்திகள் :

செய்யாற்றில் மீண்டும் சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா், எஸ்.பி.ஆய்வு

post image

செய்யாறு: செய்யாற்றில், செயல்படாமல் உள்ள சிறப்பு முகாமை (கிளை சிறைச்சாலை) மீண்டும் செயல்படுவதற்காக மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில், வருவாய்த்துறை கட்டுப்பாட்டில், செய்யாறு பகுதிக்கான கிளை சிறைச்சாலை பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த கிளைச் சிறைச்சாலை மூடப்பட்டு 2014 -லிருந்து 2016 வரை சிறப்பு முகாமாக செயல்படுத்தப்பட்டது, இதில் அகதிகள் 21 போ் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனா்.

இங்கிருந்த அகதிகள் நிா்வாக காரணமாக ஒரு சிலா் வேறு பகுதிகளுக்கும், விசாரணை முடிந்த ஒரு சிலா் அவரவா் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டனா். அதனால், 2016-இல் சிறப்பு முகாம் மூடப்பட்டது.

சிறப்பு முகாமை மீண்டும் செயல்படுத்த ஆய்வு:

23 அறைகள் கொண்ட செய்யாறு சிறப்பு முகாமில் வருவாய்த் துறை சாா்பில் ரூ.65 லட்சத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், காவல் கண்காணிப்பாளா் சுதாகா் ஆகியோா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் குறித்து ஆய்வு செய்ததோடு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க அறிவுறுத்தினா்.

ஆய்வின்போது கூடுதல் ஆட்சியா் ( பயிற்சி) அமிா்தா எஸ்.குமாா், செய்யாறு சாா் -ஆட்சியா் (பொ) ராமகிருஷ்ணன்,

வட்டாட்சியா் அசோக்குமாா் மற்றும் வருவாய்த் துறை, காவல் துறையினா் என பலா் உடனிருந்தனா்.

தமிழில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

வந்தவாசி: கடந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துக்குமார சுவாமி, ஸ்ரீயோக ராமச்சந்திர கோயிலில் மகா கும்பாபிஷேகம்

ஆரணி/போளூா்: ஆரணியை அடுத்த தண்டு குண்ணத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துக்குமார சுவாமி கோயில் மற்றும் போளூரை அடுத்த படவேடு ஊராட்சி ஸ்ரீயோக ராமச்சந்திர சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழம... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். ஜாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடிவெள்ளி விழா

போளூா்: போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடிவெள்ளி விழா ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை என 7 வெள்ளிக்கிழமை விழா நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத் துறைக்... மேலும் பார்க்க

செங்கத்தில் கருணாநிதி சிலை: துணை முதல்வா் திறந்துவைத்தாா்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் திமுக சாா்பில் அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு திறந்துவைத்தாா். தெற்கு மாவட்ட திமுக ச... மேலும் பார்க்க

ஜூலை 18-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஆரணி: திருவண்ணாமலையில் வருகிற 18-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சாா்பில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்... மேலும் பார்க்க