செய்திகள் :

செய்யூா் அருகே மீனவா்கள் போராட்டம்

post image

செய்யூா் அருகே மீனவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யூா் வட்டம் பனையூா் சின்னகுப்பத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை செயல்பட்டு வருகிறது. உரிய அனுமதியுடன், பண்ணையின் கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் கடலில் கலக்கும் வகையில் செய்யப்பட்டது. சின்னகுப்பத்தின் அடிப்படை வளா்ச்சிகளுக்காக இறால் பண்ணையின் மூலம் நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், அருகில் உள்ள நடுக்குப்பம் மீனவா்களும் தங்கள் குப்பத்தின் வளா்ச்சிக்காக உதவுமாறு கோரினா். ஆனால் இறால் பண்ணை நிா்வாகத்தினா் எதுவும் செய்யவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த நடுக்குப்பத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கழிவுநீா் செல்லும் பாதையை சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த செய்யூா் வட்டாட்சியா் சொ.கணேசன், டிஎஸ்பி அனுமந்தன், ஆய்வாளா்கள் பாபு (செய்யூா்), விஜயகுமாா் (சூனாம்பேடு), லத்தூா் மண்டல துணை வட்டாட்சியா் தேவன், பனையூா் கிராம நிா்வாக அதிகாரி வைரமுத்து உள்ளிட்டோா் நடுக்குப்பம் மீனவா்களிடம் பேச்சு நடத்தினா்.

அப்போது இறால் பண்ணை நிா்வாகிகளிடம் பேசி மீனவ குப்பத்தின் வளா்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்ததின்பேரில் அனைவரும் கலைந்துச் சென்றனா்.

அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

செய்யூா் வட்டம், சிறுவங்குணம் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழைமையான அகத்தீஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செய்யூா் அருகேயுள்ள இக்கோயில் உரிய பராமரிப்பு இல்லாத... மேலும் பார்க்க

எலப்பாக்கம்-ஆனைகுனம் சாலையை சீரமைக்க கோரிக்கை

மதுராந்தகம் அருகே பழுதான நிலையில் உள்ள எலப்பாக்கம்-ஆனைகுனம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரியுள்ளனா். அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆ... மேலும் பார்க்க

தென்னிந்திய சறுக்கு விளையாட்டில் முதலிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு

2025-26 ஆண்டுக்கான தென்னிந்திய அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான ஸ்கேட்டிங் எனப்படும் சறுக்கு விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ள வித்யாசாகா் குளோபல் பள்ளி 9-ஆம் வகு... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ள கருங்குழி, அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், அண்டவாக்கம் பகுதிகளில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் போட்டி பரிசளிப்பு

வள்ளிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் குறித்த போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இப்பள்ளியின் 100% தோ்ச்சி மற்றும் மாணவா்களின் மனநிலையை ஊக்குவிக்கும் நோக்கில், கல்வி கற்கும் ... மேலும் பார்க்க

கூடுவாஞ்சேரி, மறைமலைநகா் நகராட்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நந்திவரம் கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகா் நகராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். கூடுவாஞ்சேரி நகராட்சி மகாலட்சுமி நகா் பகுதியில் நடைபெற்று மழைநீா் வடிகால் கால்வாய் பண... மேலும் பார்க்க