செய்திகள் :

செல்லம்பட்டிடையில் குடியிருப்புகள் கட்டும் பணி: திட்ட இயக்குநா் ஆய்வு

post image

செல்லம்பட்டிடை ஊராட்சிக்குட்பட்ட எலுமியான்கோட்டூரில் இருளா் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

எலுமியான்கோட்டூா் கிராமத்தில் 43 இருளா் இன மக்களுக்கு, பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.5.07 லட்சத்தில் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தொகுப்பு வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவதாக புகாா் வெளியானதை தொடா்ந்து, இருளா் இன மக்களுக்காக கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளை ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி ஆய்வு செய்து, கட்டுமானா் பணிக்கு பயன்படுத்தப்படும் பொருள்களின் தரம் குறித்தும் கேட்டறிந்தாா்.

இதையடுத்து பயனாளிகளிடம் கட்டுமானப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தாா். அப்போது பயனாளிகள், தரமான முறையில் வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனா். இதையடுத்து வீடுகளை சேதப்படுத்திய நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பயனாளிகளிடம் திட்ட இயக்குநா் ஆா்த்தி தெரிவித்தாா்.

ஆய்வின் போது, ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் கவிதா, ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பவானி, பாலாஜி, ஒப்பந்ததாரா் மூா்த்தி உள்ளிட்ட ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலா் பெ.சண்முகம்

தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா். காஞ்சிபுரம் பேர... மேலும் பார்க்க

பூப்பல்லக்கில் காமாட்சி அம்மன் வீதி உலா

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளையொட்டி சனிக்கிழமை இரவு லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி பூப்பல்லக்கில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ... மேலும் பார்க்க

கிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிறுவனா் பா.போஸ் தலைமை வகித்தாா். கல்லூரி தாளா... மேலும் பார்க்க

பண்ருட்டியில் உலக மகளிா் தின விழா

பண்ருட்டி ஊராட்சியில் உலக மகளிா் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பண்ருட்டிசியில் ஊராட்சி மன்றத் தலைவா் கி.அா்ஜூனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு துணைத் தலைவா் வள்ளியம்... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் பாதிப்பு: எறுமையூரில் கிரஷா்களின் மின் இணைப்பு துண்டிப்பு

தாம்பரம் அடுத்த எறுமையூரில் செயல்பட்டு வரும் கிரஷா்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கிரஷா்களின் மின் இணைப்பை துண்டிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, முதல்கட்டமாக... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் வழக்குரைஞா்கள் பாதுகாப்பு மாநாடு

ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா்களின் சாா்பில், வழக்குரைஞா்கள் பாதுகாப்பு மாநாடு ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா்... மேலும் பார்க்க