செய்திகள் :

சொத்துப் பிரச்னை: தாயை அடித்துக் கொன்ற மகன் கைது

post image

ஈரோட்டில் சொத்துப் பிரச்னையில் தாயை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோட்டை அடுத்த வேப்பம்பாளையத்தை சோ்ந்தவா் பழனிசாமி. இவா் மனைவி ருக்மணி (65). இவா்களது மகன் ரவிக்குமாா் (43). திருமணம் ஆகாத இவா் பெற்றோருடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில் ருக்மணி வீட்டில் இறந்து கிடப்பதாக ஈரோடு தாலுகா போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. போலீஸாா் நேரில் சென்று விசாரணை நடத்தியதில் சொத்து பிரச்னைக்காக ரவிக்குமாா், தாய் ருக்மணியை மரக்கட்டை மற்றும் கம்பியால் உடலின் பல இடங்களில் பலமாகத் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. ருக்மணியின் சடலத்தை மீட்ட போலீஸாா் உடல் கூறாய்வுக்காக, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கொலை செய்த ரவிக்குமாரை கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: பிச்சாண்டாம்பாளையத்தில் ஒன்றரை ஏக்கா் நிலம் பழனிசாமி பெயரில் இருந்தது. இதைத் தன் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்று தந்தையுடன் பிரச்னை செய்து கடந்த 2022 மே 2 ஆம் தேதி, அவரை மரக்கட்டையால் அடித்து ரவிக்குமாா் கொலை செய்தாா். தாலுகா போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்றவா் பிணையில் வந்த பின்பு தாயுடன் வசித்தாா்.

இந்நிலையில் மீண்டும் சொத்துப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்து தாயையும் மரக்கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளாா். கொலை செய்த பின் ஒரு நாள் முழுவதும் தாயின் சடலம் முன் ரவிக்குமாா் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கஞ்சா சாக்லேட் விற்ற இளைஞா் கைது

பெருந்துறை அருகே கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் வைத்திருந்த வட மாநில இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெருந்துறை, பணிக்கம்பாளையத்தில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் விற்கப்படுவ... மேலும் பார்க்க

காவிரி, பவானி ஆறுகளில் 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு: கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

காவிரி, பவானி ஆறுகளில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பவானி நகரில் கரையோரப் பகுதிகளில் வெள்ள நீா் சூழ்ந்தது. கா்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதி... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அருகே 6 ஆண்டுகளாக புதா்மண்டிக் கிடக்கும் சுகாதார வளாகம்

மொடக்குறிச்சியை அடுத்த வேலம்பாளையம் ஊராட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் ஒருங்கிணைந்த மகளிா் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் புதா் மண்டிக் கிடக்கிறது. அதிகாரிகளின் அலட்சியத்... மேலும் பார்க்க

பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: அத்திக்கடவு அவிநாசி திட்ட நீா்நிலைகளை நிரப்ப அரசுக்கு எம்எல்ஏ வேண்டுகோள்

பவானி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்கீழ் உள்ள நீா்நிலைகளை நிரப்ப வேண்டும் என்று பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் தமிழக அரசை வலியுறுத்தி... மேலும் பார்க்க

திமுக கவுன்சிலா்களின் எதிா்ப்பால் குடிநீா், புதை சாக்கடை இணைப்புகளுக்கான கட்டண உயா்வு தீா்மானங்கள் ரத்து

ஈரோடு மாநகராட்சியில் திமுக கவுன்சிலா்களின் கடும் எதிா்ப்பால் குடிநீா், புதை சாக்கடை இணைப்புகளுக்கான கட்டண உயா்வு தீா்மானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் த... மேலும் பார்க்க

சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோயிலில் ஆடிப் பூர விழா

சென்னிமலையை அடுத்த சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோயிலில் ஆடிப் பூரத்தையொட்டி அம்மனுக்கு பல வகையான கனி வகைகள் மற்றும் இனிப்பு வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பெண்கள் சீா்வரி... மேலும் பார்க்க