செய்திகள் :

ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் விகிதம் 145% அதிகரிப்பு!

post image

ஜிஎஸ்டியால் குஜராத்தில் வரி செலுத்துவோர் விகிதம் 145 சதவீதம் அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 12.66 லட்சம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டில் அதிக வரி செலுத்துவோர் அடங்கிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் 3வது இடத்தில் உள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் பேசியதாவது,

''2017ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து வரி செலுத்துவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது.

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபோது, 8 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 5.15 லட்சமாக இருந்தது. ஆனால், 2024 - 25 நிதியாண்டில் 154% அதிகரித்து வரி செலுத்துவோர் எண்ணிக்கை 12.46 லட்சமாக உயர்ந்துள்ளது.

அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோர் எண்ணிக்கையில், நாட்டிலேயே குஜராத் 3வது இடத்தில் உள்ளது. மாநிலத்தின் பொருளாதார நடவடிக்கை உயர்ந்து வருவதையே இந்தத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

2024 - 2025 நிதியாண்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 6.38% அதிகரித்துள்ளது. இது நாட்டின் மொத்த வரி செலுத்துவோர் சராசரியை விட (3.86%) அதிகமாகும்.

இதற்கு முன்பு நாட்டின் மற்ற மாநிலங்களைப் போலவே குஜராத்தும் வாட், நுழைவு வரி, சேவை வரி, மத்திய கலால் வரி என கடினமான வரி செலுத்தும் அமைப்பில் சிக்கியிருந்தது. இது அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதாகவும் வரி செலுத்துவதற்கு வணிகர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தது.

ஆனால், ஒரே நாடு ஒரே வரி என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி இவற்றை எளிமையாக்கியுள்ளதால், வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | அண்ணா பல்கலை. முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

145 % rise in taxpayers since GST rollout in Gujarat Bhupendra Patel

குடியரசுத் தலைவருக்கு எதிராக ஆட்சேபகர வார்த்தைகள்: கார்கே மீது பாஜக குற்றச்சாட்டு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கும் எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயன்படுத்தியதாக பாஜக குற்றம்சாட்ட... மேலும் பார்க்க

அரசு நிர்வாகத் தலையீடு இல்லாத நீதித்துறையே அம்பேத்கரின் விருப்பம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

அரசு நிர்வாகத்தின் தலையீட்டில் இருந்து நீதித்துறை விலகியிருக்க வேண்டும் என்று அரசியல் சாசன வரைவுக் குழுத் தலைவர் பி.ஆர்.அம்பேத்கர் விரும்பியதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட் அமைப்பு: இந்தியா வெற்றிகர சோதனை

நீண்ட தூர இலக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தக் கூடிய நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட் அமைப்பின் சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது. லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான கவராட்டியில் ஜூன் 23 மு... மேலும் பார்க்க

விமான கட்டண திடீா் உயா்வு பிரச்னை: தீா்வு காண நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் டிஜிசிஏ உறுதி

விமான கட்டணங்கள் திடீரென உயா்த்தப்படும் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்ககம் (டிஜிசிஏ) உறுதி அளித்தது. மகா ... மேலும் பார்க்க

இணையவழி பணப் பரிவா்த்தனை முறைகளை பயங்கரவாத நிதிமாற்றத்துக்கு பயன்படுத்தும் அபாயம் - சா்வதேச அமைப்பு எச்சரிக்கை

இணையவழி வா்த்தக மற்றும் பணப் பரிவா்த்தனை முறைகளை பயங்கரவாத அமைப்புகள் தங்களுடைய பணப்பரிமாற்றுத்துக்காக தவறாக பயன்படுத்துப்படுவதாக உலகளாவிய பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பு (எஃப்.ஏ.டி.எஃப்) எச்சரித்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடா்பு மேற்கு வங்கத்தில் இருவா் கைது

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடா்புடைய இருவரை மேற்கு வங்கத்தின் கிழக்கு வா்த்தமான் மாவட்டத்தில் அந்த மாநில சிறப்பு அதிரடிப் படையினா் கைது செய்தனா். இவா்களில் ஒருவா் கொல்கத்தாவின் பவானிபூா் பகுத... மேலும் பார்க்க