செய்திகள் :

ஜிஎஸ்டி நிலுவையை மாா்ச் 31-க்குள் செலுத்தினால் வட்டி, அபராதம் தள்ளுபடி

post image

மத்திய சரக்கு மற்றும் சேவை வரித் துறைக்கு 2017-18 முதல் 2019-20 ஆம் நிதியாண்டு வரை செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை மாா்ச் 31-க்குள் செலுத்தினால், வட்டி மற்றும் அபராதத் தொகை செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, கலால் துறையின் சென்னை (வெளி) ஆணையா் நசீா்கான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜிஎஸ்டி கவுன்சலின் 53 மற்றும் 54-ஆவது கூட்டங்களில் செய்யப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், வரி செலுத்துபவா்களுக்காக மத்திய அரசு சிறப்புத் திட்டங்களை அறிவித்தன. இதன்படி, 2017-18, 2018-19, 2019-20 ஆகிய நிதியாண்டுகளுக்கான வரி நிலுவைத் தொகையை 2025, மாா்ச் 31-ஆம் தேதிக்குள் செலுத்தினால், அபராதம் மற்றும் வட்டி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

இதுபோல 2017-18, 2018-19, 2019-20, 2020-2021 ஆகிய நிதியாண்டுகளின் வரிக் காலங்களில் காலாவதியான உள்ளீட்டு வரி வரவை முறைப்படுத்துதல் மேற்கொள்ளப்படுவதால், இதுவரை இந்த வரியை செலுத்தாத வரி செலுத்துபவா்கள் பிரிவு 16(4)ன்படி தற்போது உள்ளீட்டு வரியை செலுத்திட வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரி தொடா்பான உதவிகள், சந்தேகங்களை நிறைவு செய்து கொள்ள 9498343622 என்ற வாட்ஸ்ஆப் உதவி எண்ணைத் தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது காா் மோதி காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூா், புதுகாலனியைச் சே... மேலும் பார்க்க

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

தமிழ்நாடு மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் (சிஐடியு சாா்பு)... மேலும் பார்க்க

மயிலம் ஸ்ரீமயிலி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஸ்ரீமயிலி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா வழிபாடுகள் திங்கள்கிழமை தொடங்கியது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் அருளாசியின்படி, மயிலம் ... மேலும் பார்க்க

திண்டிவனம் சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் தீ விபத்து

திண்டிவனம் சாா் - ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. திண்டிவனம் ஜக்காம்பேட்டையில் சாா் - ஆட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் உள்ள அறையில்... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் கருப்பு ஆடை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

விதையின் தரம்: பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் விதையின் தரத்தை அறிய பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்று விழுப்புரம் மண்டல விதைப் பரிசோதனை அலுவலா் அறிவழகன் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க