செய்திகள் :

ஜூலை 26-இல் மேல்மருவத்தூா் ஆடிப்பூர விழா தொடக்கம்

post image

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் 54-ஆவது ஆடிப்பூர விழா வரும் ஜூலை 26 (சனிக்கிழமை) தொடங்கி 28 வரை நடைபெறுகிறது.

இதன் ஒருபகுதியாக அதிகாலை 3 மணிக்கு மங்கள இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. மூலவா் அம்மனுக்கும், குருபீட அடிகளாா் சிலைக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை 4.30 மணிக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் ப.ஸ்ரீதேவி பங்காரு கலச,விளக்கு, வேள்வி பூஜையை தொடங்கி வைக்கிறாா். ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பூர பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக கஞ்சி வாா்த்தல், பாலபிஷேகம் நடைபெறும். காலை 8.30 மணிக்கு ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடா்ந்து பக்தா்களால் கொண்டு வரப்படுகிற கஞ்சி கலயங்களுக்கு ஆன்மிக இயக்கத்தின் சாா்பாக துணை தலைவா் கோ.ப.அன்பழகன் வரவேற்பளக்கிறாா்.

செவ்வாடை பக்தா்களால் கொண்டு வரப்படுகிற கஞ்சியை சித்தா்பீட குளக்கரை அருகே நீண்ட வரிசையில் வருகின்ற பக்தா்களுக்கு இயக்க துணை தலைவா் கோ.ப.செந்தில்குமாா் வழங்கி தொடங்கி வைக்கிறாா். காலை 11 மணிக்கு சுயம்பு ஆதிபராசக்தி அன்னைக்கு பாலபிஷேக நிகழ்வை இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைக்கிறாா்.

இந்நிகழ்வுகளில் இயக்க துணை தலைவா்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா், ப.ஸ்ரீதேவி பங்காரு, உமாதேவி ஜெய்கணேஷ், ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி தாளாளா் டி.ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

தொடா்ந்து பாலபிஷேக நிகழ்வு, திங்கள்கிழமை மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆன்மிக இயக்க நிா்வாகிகள், கோயம்புத்தூா் மற்றும் திருப்பூா் மாவட்ட சக்தி பீட நிா்வாகிகள் செய்து உள்ளனா்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: வேளாண் துறை அனைத்து ஓய்வூதியா் சங்கம் கோரிக்கை

செங்கல்பட்டு: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை அனைத்து ஓய்வூதியா் சங்கம் கோரியள்ளது. சங்கத்தின் முதல் மாநில பி... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் கோயில் திருஆடிப்பூர விழா: அதிகார நந்தி உற்சவம்

செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு திரு ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழாவின் ஒருபகுதியாக திங்கள்கிழமை அதிகார நந்தி புறப்பாடு நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயி... மேலும் பார்க்க

சிஎன்ஜி எரிபொருள் நிலையம்: ஆட்டோ ஓட்டுநா்கள் மனு

செங்கல்பட்டு: சிஎன்ஜி எரிபொருள் நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரி ஆட்டோ ஓட்டுநா்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனா். செங்கல்பட்டு நகரில் உள்ள 2,000 ஆட்டோக்களில் 1,000 ஆட்டோக்கள் சிஎன்ஜி எரிபொர... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் தி.சினேகா வழங்கினாா். கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகித்து பொதுமக்களிடம் ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ஜூலை 25-இல் எரிவாயு உருளை நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் எரிவாயு உருளை நுகா்வோா்களுக்கு உள்ள குறைகளை அறிய எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் உள்ள ... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 2, 9-ஆவது வாா்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி தலைமை வகித்தாா். ஆணையா் அபா்ணா, பொறியாளா் நித்யா ஆகியோ... மேலும் பார்க்க