செய்திகள் :

டயப்பரில் மலம்: 8 மாத குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டு கொன்ற தாய்; நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி!

post image

டயப்பரை அழுக்காக்கியதால் கொதிக்கும் நீரில் குழந்தையைப் போட்டு கொன்ற பெண்ணை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்தவர் ஜடோரியா ரெனே கிளீமன்ஸ் (21). இவருக்கு 8 மாத ஆண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தை டயப்பரில் மலம் கழித்ததால் ஆத்திரமடைந்த ஜடோரியா ரெனே கிளீமன்ஸ், குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டிருக்கிறார்.

இதனால் குழந்தை கதறி துடித்திருக்கிறது. அருகில் வசிப்பவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

கொல்லப்பட்ட குழந்தை
கொல்லப்பட்ட குழந்தை

கடுமையான காயங்களால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இதற்கிடையில் குழந்தை எப்படி கொதிக்கும் நீருக்குள் விழுந்தது என்பது தொடர்பாக காவல்துறை விசாரணையை தொடங்கியது. இந்த நிலையில்தான் குழந்தையின் தாய், குழந்தை இறந்த அன்று என்ன நடந்தது என்பது குறித்து அவரின் தோழியிடம் தெரிவித்திருக்கிறார்.

அதன் அடிப்படையில் காவல்துறை குழந்தையின் தாயை கைது செய்ய கைது வாரண்ட் பிறப்பித்திருக்கிறது. இந்த கொடூரமான சம்பவம் பிப்ரவரி 4, 2025 அன்று நடந்தது என்றாலும் ஜூன் 13 வரை கைது வாரண்ட் பிறப்பிக்கப்படவில்லை. எனவே தற்போது தலைமறைவாக இருக்கும் ஜடோரியா ரெனே கிளீமன்ஸை தேடி வருகின்றனர்.

கரூர்: காதல் திருமணம் செய்த இளஞ்ஜோடி; வீட்டுக் காவலில் மணமகன்; மணப்பெண் கண்ணீர்; பின்னணி என்ன?

கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள பொரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சதயவர்த்தினி (வயது: 19). இவரும், தோகமலை அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி (வயது: 21) என்பவரும் சிறுவயது முதலே காதலித்து... மேலும் பார்க்க

தென்காசி: விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை திடீர் மரணம்; நடந்தது என்ன?

தென்காசி மாவட்டம் வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ் மற்றும் புனிதா தம்பதி. இவர்களுடைய இரண்டரை வயது ஆண் குழந்தை நேற்று இரவு வீட்டின் முன்பு தனது தாயுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளது.அப்போது திட... மேலும் பார்க்க

தென்காசி: வீட்டில் குளித்து கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்த நகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 24 வார்டுகள் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் இந்த 2025-26 நிதியாண்டிற்கான வரி வசூல் செய்வதற்காக நகராட்சி வசூல் பணி மேற்பார்வையாளர் ... மேலும் பார்க்க

நிலுவையில் கொலை வழக்கு; காதலித்த சிறுமி; உறவினர்கள் கண்டித்ததால் விபரீத முடிவு - திருச்சி பரிதாபம்

கரூர் மாவட்டம், புகளூர் அருகே உள்ள மொஞ்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் அந்த 17 வயது சிறுமி, அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவருக்கும், திருச்சி மணச்சநல... மேலும் பார்க்க

கரூர்: 'ரௌடியை பிடிக்க முயன்ற போலீஸ்; தாக்கிவிட்டு ஓடியதால் சுட்டுப் பிடிப்பு!' - நடந்தது என்ன?

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோயில் பகுதியைச் சேர்ந்த பென்சில் தமிழழகன்(வயது: 30). இவர்மீது கரூரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் பல பதிவாகியுள்ளன. இதனால் இவர் ரௌடி பட்ட... மேலும் பார்க்க

கோவை அரபிக் கல்லூரி மூலம் ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: மேலும் 4 பேர் கைது - பின்னணி என்ன?

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு கார் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இ... மேலும் பார்க்க