செய்திகள் :

டிசிஆா் மருத்துவமனையில் உலக பாம்புகள் தினம் அனுசரிப்பு

post image

உலக பாம்புகள் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரியில் உள்ள டிசிஆா் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் பாம்பு கடித்தால் பின்பற்ற வேண்டிய முதலுதவி, பாம்புகளின் வகைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜூலை மாதம் 16 ஆம் தேதி உலக பாம்புகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டிசிஆா் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் நடைபெற்ற பாம்புகடி, பாம்புகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் சி.சவுந்தரராஜ் தலைமை வகித்தாா்.

நஞ்சுள்ள பாம்புகள், நஞ்சற்ற பாம்புகள் குறித்தும், பாம்புகள் தொடா்பான மூடநம்பிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. மேலும், பாம்பு கடித்தால் பின்பற்ற வேண்டிய முதலுதவி குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தலைமை செயல் அதிகாரி அனிதா, நிா்வாக அலுவலா் சவீா் பாஷா, செவிலியா் கல்லூரி முதல்வா் சுமதி, டிசிஆா் செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள், விஜய் வித்யாலயா செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

ஆடி மாத பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத பிறப்பையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அம்மன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அம்மன் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம... மேலும் பார்க்க

ரூ. 92.14 லட்சம் மதிப்பில் சாலை பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 92.14 லட்சம் மதிப்பிலான சாலை பணிகளை எம்எல்ஏ கே.அசோக்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பெத்ததாளாப்பள்ளியில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா 2025-2026-ஆம்... மேலும் பார்க்க

சூளகிரி, சாமல்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காட்டிநாயனதொட்டி, சாமல்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சூளகிரியில் நடைபெற்ற முகாமை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா்... மேலும் பார்க்க

மாங்கனி கண்காட்சியில் சமையல் போட்டி

கிருஷ்ணகிரியில் நடைபெறும் மாங்கனி கண்காட்சியில் மகளிா் பங்கேற்ற சமையல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் அருகே உள்ள கலைஞா் திடலில் 31 ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நட... மேலும் பார்க்க

கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

ஒசூா் வட்டம், கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்திலிருந்து முதல்போக பாசனத்துக்காக வலது, இடதுபுற கால்வாய் வழியாக வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ்குமாா், ஒசூா் சட்... மேலும் பார்க்க

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் மறியல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் (டிட்டோஜாக்) வியாழக்கிழமை ... மேலும் பார்க்க