செய்திகள் :

டிசிஎஸ் சிஇஓ கீர்த்திவாசனின் ஊதியம் எவ்வளவு தெரியுமா?

post image

டிசிஎஸ் நிறுவனம் பணிநீக்கத்தை அறிவித்துள்ள நிலையில் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளின் ஊதியம் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், உலகம் முழுவதும் உள்ள தங்கள் நிறுவனங்களில் இருந்து 2%, அதாவது சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது ஐடி ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்யறிவு தொழில்நுட்பத்தினால் நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில் வரும் காலங்களில் இதனால் பல்வேறு துறைகளின் வேலைவாய்ப்பு பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

திறன் பொருத்தமின்மை காரணமாக பணிநீக்கம் செய்யப்படுவதாகவும் அவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நிர்வாக அதிகாரி கீர்த்திவாசன் கூறியுள்ளார்.

இந்நிலையில் டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி கீர்த்திவாசனின் ஊதியம் குறித்த தகவல்கள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

தகவல்களின்படி, கீர்த்திவாசன் ஆண்டுக்கு ரூ. 26.52 கோடியை ஊதியமாகப் பெறுகிறார். அடிப்படை ஊதியம் ரூ. 1.39 கோடி, சலுகைகள் ரூ. 2.12 கோடி மற்றும் 23 கோடி கமிஷன் ஆகியவை இதில் அடங்கும். கடந்த நிதியாண்டைவிட இந்த ஆண்டு 4% ஊதியம் அதிகம்.

இதற்கு முன்னதாக டிசிஎஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த என்.ஜி. சுப்பிரமணியம், கடந்த 2024 மே மாதம் பதவியில் இருந்து விலகியபோது ஆண்டுக்கு ரூ. 11.55 கோடி ஊதியமாகப் பெற்றுள்ளார்.

டிசிஎஸ் தலைவர் என். சந்திரசேகரன் ரூ.2.1 லட்சத்தை மட்டும் ஊதியமாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

With TCS announcing layoffs, there has been widespread talk about the salaries of top executives, including the company's CEO.

இதையும் படிக்க | டிசிஎஸ் பணிநீக்கத்தால் வீடு, மனை விற்பனை பாதிக்குமா? வல்லுநர்கள் சொல்வது என்ன?

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற பாகிஸ்தானுக்கு தொடா் வலியுறுத்தல்: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைவிட்டு உடனடியாக வெளியேற பாகிஸ்தானை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என மத்திய அரசு வெள்ளிக்கி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரை: மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமா்

தொடா்ந்து 12-ஆவது முறையாக சுதந்திர தின உரையாற்ற உள்ள நிலையில், தனது பேச்சில் இடம்பெற வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனைகளை அனுப்புமாறு பொதுமக்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.நாட்டின் சு... மேலும் பார்க்க

பணம் ஈட்டும் விளையாட்டுகள்: சிசிஐயிடம் கூகுள் முன்மொழிவு

இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோரில் பணம் ஈட்டும் விளையாட்டுகளை அனுமதிக்க இந்திய தொழில் போட்டி ஆணையத்திடம் (சிசிஐ) கூகுள் நிறுவனம் முன்மொழிந்துள்ளது.இதுதவிர, இந்தியாவில் கூகுள் விளம்பர கொள்கையில் மாற்றங்க... மேலும் பார்க்க