செய்திகள் :

டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம்: விக்ரமராஜா

post image

சேலம் : டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா சிறப்புரை ஆற்றினாா்.

பின்னர்,விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் கூறுகையில்,

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் மே 5 ஆம் தேதி வணிகர் சங்க பேரமைப்பின் 42 ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு வணிகா் அதிகார பிரகடன மாநாடாக நடைபெறும்.

இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்: விஜய்

இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. குறிப்பாக சிறு வணிக விபாரிகளையும், மளிகை கடை உரிமையாளர்களையும் பாதிக்கும் டி-மார்ட் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அனுமதி இல்லாமல் அத்துமீறி தங்களது நிறுவனங்களை நிறுவி வருகிறது. இதனால் 20 சதவிகித வியாபாரிகள் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை எனில் வணிகர் சங்கங்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த போராட்டம் அகில இந்திய அளவில் நடத்தப்படும். வணிகா்கள் நலனை காக்க சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். ஜிஎஸ்டி உள்பட வணிகா்களின் பிரச்னைகளின் உரிய தீா்வு காணப்படாவிட்டால், போரட்டத்தை முன்னெடுக்க வணிகா் சங்க பேரமைப்பு தயங்காது என்று விக்ரமராஜா கூறினார்.

பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட நக்சல்களின் உடல்கள் மீட்பு!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் என்கவுன்டரில் பலியான 3 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் க... மேலும் பார்க்க

இந்தியா - வங்கதேச எல்லையில் கடத்தப்படும் கால்நடைகள்!

மேற்கு வங்கத்திலுள்ள இந்தியா - வங்கதேசத்தின் எல்லையில் 16 கால்நடைகள் மற்றும் போதைப் பொருள் ஆகியவற்றை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மால்டா மாவட்டத்தின் எல்லைப் புறக்காவல் ... மேலும் பார்க்க

விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக விடியோ பதிவிட்ட மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கராச்சியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளரும் ரஃப்தார் எனும் டிஜிட்டல... மேலும் பார்க்க

பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘தினமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியைத் தினமணி நாளிதழ் ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்தித்துப் பேசினார்.தில்லியில் பிரதமரை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை சந்தித்த கி. வைத்தியநாதன், தினமணியின் 90 ஆம் ஆண்டு சிறப்பு மலர் ... மேலும் பார்க்க

பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை: முதல்வர்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக செ... மேலும் பார்க்க

ஆப்கனில் பெண் கல்வி மீதான தடை தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும்: ஐ.நா. கண்டனம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் கல்வி கற்க தலிபான்கள் விதித்துள்ள தடையானது தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும் என ஐக்கிய நாடுகளின் பெண்கள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் புதிய கல்வியாண்... மேலும் பார்க்க