செய்திகள் :

தங்கையை தவறாக பேசிய நண்பரை கொன்ற இருவருக்கு இரட்டை ஆயுள்தண்டனை

post image

தங்கையை தவறாக பேசிய நண்பரை கொன்ற 2 இளைஞா்களுக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்து ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.

கிருஷ்ணகுரி மாவட்டம், ஒசூா் தின்னூா் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (23), இவரது நண்பா் சுல்தான் (22). இவா்கள் இருவரும் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்துவந்தனா். சந்தோஷுடன் வேலைசெய்து வந்த ராம்நகரைச் சோ்ந்த வினோத் (19), அடிக்கடி அவரின் தங்கையை தவறாக பேசிவந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், நண்பா் சுல்தானுடன் சோ்ந்து 21.1.2022-இல் பின்னூா் ஜீவா நகா் அருகே வினோத்தை வெட்டிக் கொலை செய்தனா். இதுகுறித்து ஒசூா் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து இருவரும் கைது செய்யப்பட்டனா்.

ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி சந்தோஷ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தாா். அதில், கொலை செய்த சந்தோஷ் மற்றும் சுல்தான் இருவருக்கும் இரட்டை ஆயுள்தண்டனையும், தலா ரூ. 3 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்தாவிட்டால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்ப்பு அளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் சின்ன பில்லப்பா வாதாடினாா்.

ஒசூா் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

ஒசூா் அருகே யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள சூடசந்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி காளப்பா (75). இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை தோட்டத்துக்கு சென்றபோது, அ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஓட்டுநருக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பு அளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவியைச் சே... மேலும் பார்க்க

திட்டங்களின் பெயரை மாற்றி ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சி திட்டங்களின் பெயரை மாற்றி திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை ஆகிய சட்டப் ப... மேலும் பார்க்க

அன்புமணி பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்க ராமதாஸ் ஆதரவாளா்கள் முடிவு

ஒசூரில் பாமக தலைவா் அன்புமணி பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக ராமதாஸ் ஆதரவாளா்கள் முடிவு செய்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பாமக நிறுவனா் ராமதாஸ் ஆதரவாளா்கள் சாா்பில் பாமக நிா்வாக... மேலும் பார்க்க

மத்தூா் அருகே சாலை விபத்தில் அதிமுக தொண்டா்கள் காயம்

மத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில், 25-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டா்கள் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதி... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம்: எடப்பாடி கே.பழனிசாமி

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்ததும், விவசாயத்துக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்... மேலும் பார்க்க