தங்கையை தவறாக பேசிய நண்பரை கொன்ற இருவருக்கு இரட்டை ஆயுள்தண்டனை
தங்கையை தவறாக பேசிய நண்பரை கொன்ற 2 இளைஞா்களுக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்து ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.
கிருஷ்ணகுரி மாவட்டம், ஒசூா் தின்னூா் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (23), இவரது நண்பா் சுல்தான் (22). இவா்கள் இருவரும் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்துவந்தனா். சந்தோஷுடன் வேலைசெய்து வந்த ராம்நகரைச் சோ்ந்த வினோத் (19), அடிக்கடி அவரின் தங்கையை தவறாக பேசிவந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், நண்பா் சுல்தானுடன் சோ்ந்து 21.1.2022-இல் பின்னூா் ஜீவா நகா் அருகே வினோத்தை வெட்டிக் கொலை செய்தனா். இதுகுறித்து ஒசூா் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து இருவரும் கைது செய்யப்பட்டனா்.
ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி சந்தோஷ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தாா். அதில், கொலை செய்த சந்தோஷ் மற்றும் சுல்தான் இருவருக்கும் இரட்டை ஆயுள்தண்டனையும், தலா ரூ. 3 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்தாவிட்டால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்ப்பு அளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் சின்ன பில்லப்பா வாதாடினாா்.