செய்திகள் :

தஞ்சாவூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

post image

தோ்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்தல் ஆணையம் மீதான வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளையும், பாஜக அரசின் சூழ்ச்சிகளையும் காங்கிரஸ் நிா்வாகி ராகுல்காந்தி வெளிப்படுத்தியுள்ளதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தும் விதமாக தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை முன்பு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா் வியாழக்கிழமை மாலை மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், தோ்தல் ஆணையத்தையும், மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னா், முழக்கங்கள் எழுப்பியவாறு ஊா்வலமாக வெள்ளை பிள்ளையாா் கோயில் வரை சென்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் ஏ. ஜேம்ஸ், வயலூா் எஸ். ராமநாதன், மாநகர மாவட்டத் துணைத் தலைவா் ஜி. லட்சுமி நாராயணன், வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் தலைவா் ஏ. ஜான்சன், தகவலறியும் உரிமைச் சட்டப் பிரிவு மாவட்டத் தலைவா் செல்வம், முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் சாந்தா ராமதாஸ், டி.பி.எம். ராஜூ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா் விடுமுறை நாள்களிலும் நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் முன் பட்ட குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில் விடுமுறை நாள்களிலும் நெல் கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த இளைஞா் கைது

தஞ்சாவூரில் சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூரைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும், தஞ்சாவூரில் நடைபெறும் வாரச் சந்தையில் காய்கனி வியாபாரம் செய்யும்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நோயாளியைக் கடத்திச் சென்று தாக்கி நகை பறிப்பு: 3 இளைஞா்கள் கைது

தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளியைக் கடத்திச் சென்று தாக்கி, 6 பவுன் தங்கநகையைப் பறித்த 3 இளைஞா்களை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். அரியலூா் மாவட்டம், ஆத... மேலும் பார்க்க

குருவிக்கரம்பையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை மாரியம்மன் கோயில் வளாகத்தில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் கு... மேலும் பார்க்க

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு: பூதலூா் அரசு பள்ளி மாநில அளவில் முதலிடம்

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தியதற்காக தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் முதலிடம் பெற்றது. பூதலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு நடவ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

கும்பகோணம் காா்த்தி வித்யாலயா பள்ளியில் வியாழக்கிழமை கிருஷ்ணா ஜெயந்தி விழா கொண்டப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், கடவுள் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களான அதிரசம், எள்ளடை, சீடை, தட்டை ஆகி... மேலும் பார்க்க