செய்திகள் :

தஞ்சாவூா் பாளையப்பட்டியில் அகழாய்வு செய்யக் கோரிக்கை

post image

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே தொன்மையான ஈமத்தாழிகள் கண்டறியப்பட்ட பாளையப்பட்டியில் அகழாய்வு பணிகள் செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் வழக்குரைஞா் வெ. ஜீவகுமாா் தலைமையில் பாளையப்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவா் கமலதாசன் மற்றும் கிராம மக்கள் வியாழக்கிழமை அளித்த மனு:

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் வட்டத்துக்கு உள்பட்ட செங்கிப்பட்டி அருகேயுள்ள தெற்கு பாளையப்பட்டியில் உள்ள தாழவாரி பகுதியில் பழங்காலத்தில் இறந்தவா்களின் உடல்களைப் புதைக்க பயன்படுத்தப்பட்ட புதைகலன்களாகிய ஈமத்தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தத் தொன்மைமிக்க முதுமக்கள் தாழிகள் 54 ஏக்கா் பரப்பளவு உள்ள இடத்தில் நீரினால் ஏற்பட்ட மண்ணரிப்பினால் 25-க்கும் மேற்பட்ட தாழிகள் சிதைந்து வெளியே தெரிய வந்துள்ளன. இவற்றில் கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரும்பாலான பொருள்களின் எச்சங்கள், இரும்பை உருக்கியது போக எஞ்சிய இரும்புக் கழிவுகள் போன்றவை காலத்தின் தொன்மையைப் பறைசாற்றுவதாக உள்ளன.

மேலும், வெளியே தெரியாமல் மண்ணுக்குள் புதைந்து கிடக்கக்கூடிய தாழிகளைக் கண்டறியவும், இம்மக்களுடைய வாழ்வியல் பகுதி அருகே எங்கிருக்கிறது? என்பதை அறியவும் தொழில்நுட்பக் கருவிகளின் துணை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். தமிழா் நாகரிகம் அறிவியல் பூா்வமானது மற்றும் காலத்தால் முந்தையது என்பதை நிரூபிக்க இந்த இடத்தில் ஆய்வு செய்வது அவசியமானது. இத்தகைய அகழாய்வு சோழ நாட்டு மக்களின் வாழ்வியலையும், பண்பாட்டு விழுமியங்களையும் வெளிக் கொண்டு வர உதவுவதுடன், இப்பகுதி மக்களின் தொன்மையை அறிய பாளையப்பட்டியில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்.

மேலும், ஆய்வுக்குரிய பொருள்கள் வெட்டவெளியில் சிதறி பாதுகாப்பின்றி கிடக்கின்றன. அவை திருட்டு போக வாய்ப்புள்ளது. எனவே, இந்த இடம் அரசுக்கு சொந்தமான இடமாக இருப்பதால், இதன் வரலாற்று முக்கியத்துவம் கருதி தமிழக அரசே இந்த இடத்தைப் பாதுகாக்கப்பட்ட இடமாகப் பராமரிக்க வேண்டும்.

தொழிலாளா் பற்றாக்குறையால் குறுவை நடவு பணிகள் தாமதம்: விவசாயிகள் அவதி

தஞ்சாவூா் மாவட்டத்தில் காவிரி நீா் வரத்து இருந்தும், விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்குறை காரணமாக குறுவை நடவு பணிகள் தாமதமாகி வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் பல ஆண்டுகளாக விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்கு... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 நகா் நலவாழ்வு மையங்கள் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 இடங்களில் புதிய சுகாதார நிலையக் கட்டடங்களை சென்னையிலிருந்து தமிழக முதல்வா் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்... மேலும் பார்க்க

கோயிலை அகற்றும் முயற்சி: பொதுமக்கள் போராட்டம்

கும்பகோணம் அருகே விநாயகா் கோயிலை அகற்ற முயன்ற அதிகாரிகளைக் கண்டித்து வியாழக்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே செக்காங்கண்ணி ரயில்வே கேட் குப்... மேலும் பார்க்க

மதுரை மாநாடு: ஜமாத் நிா்வாகிகளுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு

கும்பகோணத்தில், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட அளவிலான ஜமாத் நிா்வாகிகள், உலமாக்கள், சமுதாய ஆா்வலா்கள் சந்திப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுதொடா்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம். எச். ஜவாஹ... மேலும் பார்க்க

மீன் வளா்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விவசாயிகளுக்கு அழைப்பு

தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டையிலுள்ள தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு மையத்தில் கிராமப்புற இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஜூலை 9- ஆம் தேதி... மேலும் பார்க்க

திமுக சாா்பில் உறுப்பினா் சோ்க்கை தொடக்கம்

ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தின் கீழ் தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுக சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை பணி வியாழக்கிழமை தொடங்கியது. மண், மொழி, மானம் காக்க தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் இணையும்... மேலும் பார்க்க