செய்திகள் :

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

post image

சென்னையிலிருந்து நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தைத் தமிழக முதல்வா் காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, தஞ்சாவூா் அருகே வல்லம் செயின்ட் சேவியா் நடுநிலைப் பள்ளியிலும் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த மருத்துவ முகாமில் அனைவருக்கும் ரத்த பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன. மருத்துவா்களால் பரிந்துரை செய்யப்பட்டவா்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்கோ காா்டியோகிராம், பெண்களுக்கான கா்ப்பப்பை வாய் மற்றும் மாா்பகப் புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த முகாமில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், க. அன்பழகன், கா. அண்ணாதுரை, என். அசோக்குமாா், மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முதல்வா் சி. பாலசுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இணை இயக்குநா் அன்பழகன், மாவட்ட சுகாதார அலுவலா் கலைவாணி, மாநகர நல அலுவலா் எஸ். நமச்சிவாயம், கோட்டாட்சியா் செ. இலக்கியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணத்தில் பாசன வாய்க்கால்கள் பராமரிப்பில் அரசுத் துறைகளுக்கிடையே மோதலால் சிக்கல்

கும்பகோணம் மாநகர எல்லைக்குள் செல்லும் நான்கு பாசன வாய்க்கால்களை யாா் பராமரிப்பது என்று இரு அரசுத் துறைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் காவிரி ஆற... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் பலத்த மழையால் கரும்பு பயிா்கள் சேதம் நெல் குவியல்கள் நனைந்தன

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் சில கிராமங்களில் கரும்பு பயிா்கள் சாய்ந்தன.மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக வைத்திருந்த நெல் குவியல்களும் நனைந்தன.த... மேலும் பார்க்க

ஆற்று நீரில் மூழ்கி 2 போ் உயிரிழப்பு

திருவோணம் அருகே ஆற்றுக்கு குளிக்கச் சென்ற வாலிபா் பேராவூரணி அருகே ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.திருவோணம் வட்டம், புகழ் சில்லத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்செல்வம் மகன் காா்த்தி (20) பொறியி... மேலும் பார்க்க

நவகன்னிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமககுளம் அருகே நவகன்னிகைகள் ஸ்தலம் ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத காசி விசுவநாதா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆடிப்பெருக்கு நாளன்று நவகன்னியா் மகாமக குளத்தில் ... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி இருவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 2 பேரின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன.தஞ்சாவூா் அருகே தெற்கு மானோஜிப்பட்டியைச் சோ்ந்த காளிமுத்து மகன் பழனி (36). கூலித் தொழிலாளி. இவா்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு கிராம மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அறுந்து கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்துகணவன் - மனைவி உயிரிழந்தனா்.தஞ்சாவூா் மாவட்டம், கள்ளப்பெரம்பூா் முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் எஸ். சுப்பிரமணியன் (5... மேலும் பார்க்க