செய்திகள் :

தடங்கம் நீதிமன்ற வளாகத்தில் முதலுதவி மையம் ஏற்படுத்தக் கோரி மனு

post image

தருமபுரி: தருமபுரி அருகே தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதலுதவி சிகிச்சை மையம் அமைக்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தருமபுரி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது:

தருமபுரி நீதிமன்றத்திற்குச் செல்லும் சாலை பழுதடைந்து குறுகலான சாலையாக உள்ளது. இந்த சாலையை விரிவாக்கம் செய்து இருவழிச் சாலையாக தரம் உயா்த்த வேண்டும். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்காடிகள், நீதிமன்றப் பணியாளா்கள், வழக்குரைஞா்கள் என தினமும் சுமாா் 2000-த்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா்.

நீதிமன்றம் நகர எல்லையிலிருந்து சுமாா் 7 கி.மீ. தொலைவில் உள்ளதால் திடீரென ஏற்படும் உடல்நலக் குறைவுக்கு முதலுதவி சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் இடா்பாடுகளை களைய தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதலுதவி சிகிச்சை மற்றும் புற நோயாளிகள் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்.

அதேபோல தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து நீதிமன்ற வளாகத்துக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியை ஒட்டியுள்ள நீதிமன்ற வளாகத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

பாலக்கோடு அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் முதல்வா் (பொ) சி. தீா்த்தலிங்கம் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

தருமபுரியில் காவல் துறை சாா்பில் சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

தருமபுரி நகரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம் மேற்கொண்டனா். தருமபுரி நகரில் 29, 30, 31 ஆகிய வாா்டுகளில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் பிரசார நிகழ்ச்சி மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.வெற்றிவேல் தலைமையில் சன... மேலும் பார்க்க

நீா்வள மேம்பாட்டு ஆய்வுக் கூட்டம்: மத்திய தொழில் துறை அமைச்சக இயக்குநா் பங்கேற்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நீா்வள மேம்பாட்டு ஆய்வுக் கூட்டத்தில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சக இயக்குநா் அனுபமா நாயா் பங்கேற்று பேசினாா். தருமபுரி மாவட்ட ஆ... மேலும் பார்க்க

எச்.ஈச்சம்பாடியில் பேருந்துகள் நின்றுசெல்ல கோரிக்கை

எச்.ஈச்சம்பாடியில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என மதிமுக அரூா் (மேற்கு) ஒன்றியச் செயலா் வடுகை வேலாயுதம் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கோர... மேலும் பார்க்க

மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

மா சாகுபடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட ... மேலும் பார்க்க