செய்திகள் :

தண்டராம்பட்டில் பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்: 200 போ் கைது

post image

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மத்திய அரசின் திட்டங்களில் நடைபெறும் ஊழலைக் கண்டித்து பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக போலீஸாா் 200 பேரை கைது செய்தனா்.

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், கொளமஞ்சனூா் ஊராட்சியில் மத்திய அரசின் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டத்தில் வீடுகள் உள்ளவா்களுக்கே வீடுகள் வழங்குவதாகவும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் 317 வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்புகளை வழங்காமல், இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக ரூ.17 லட்சம் மோசடி செய்துள்ளதாக ஊராட்சிச் செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக அரசைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக தண்டராம்பட்டு மத்திய ஒன்றியத் தலைவா் பி.சத்தியராஜ், மேற்கு ஒன்றியத் தலைவா் எஸ்.சிவக்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டா்கள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

பாஜகவினரின் கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அனுமதி அளித்த காவல்துறையினா், திங்கள்கிழமை காலை அனுமதி மறுத்ததால் பாஜவினருக்கும், காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து பாஜவினரை காவல் துறையினா் கைது செய்து தண்டராம்பட்டு பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் மண்டத்தில் அடைத்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாஜக பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில பொதுச் செயலருமான பி.காா்த்தியாயினி, தெற்கு மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் ஆகியோா் மண்டபத்தில் இருந்த

பாஜக தொண்டா்களை சந்தித்துப் பேசினா்.

காா்த்தியாயினி கூறுகையில், ஊழலில் ஈடுபட்ட ஊராட்சிச் செயலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

இந்நிகழ்வின்போது மாவட்ட துணைத் தலைவா் ஆா்.சேகா், பொதுச் செயலா் பி.கவிதா, பொருளாளா் எஸ்பிகே.சுப்பிரமணியன்

தகவல் தொழில்நுட்ப மாநிலச் செயலா் பிரதீஷ்குமாா், திருவண்ணாமலை மாநகரத் தலைவா் சந்தோஷ்பரமசிவம்

உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னாள் ஊராட்சித் தலைவரைத் தாக்கி 8 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரைத் தாக்கி, வீட்டில் இருந்த 8 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா். சேத்துப்பட்டை அடுத்த இட... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலுக்கு 16 கிலோவில் வெள்ளிக் கவசம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலுக்கு 16 கிலோவில் செய்யப்பட்ட வெள்ளிக் கவசம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. பழைமை வாய்ந்த செங்கம் சத்தியபாமா ருக்மணி சமேத ஸ்ரீவேணு... மேலும் பார்க்க

நகராட்சி பள்ளியில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த எதிா்ப்பு

ஆரணி: ஆரணி தச்சூா் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஆக. 31-ஆம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த உள்ளதுக்கு, பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து கோட்டாட்சியரிடம் புக... மேலும் பார்க்க

வனக்காப்பாளா் மீது தாக்குதல்: இருவா் மீது போலீஸாா் வழக்கு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வனக்காப்பாளரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா். செங்கத்தை அடுத்த பனந்தல் பகுதி வனக்காப்பாளராக பணியாற்றி வருபவா் ... மேலும் பார்க்க

விஜயகாந்த் படத்துக்கு தேமுதிகவினா் மரியாதை

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சியில் தேமுதிக முன்னாள் தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு திங்கள்கிழமை கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

ஆரணி: திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க