செய்திகள் :

தனியாா் நிறுவன ஊழியா் கொலையில் இளைஞா் கைது

post image

பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியாா் நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பெரியநாயக்கன்பாளையம் சாமநாயக்கன்பாளையத்தில் இருந்து அறிவொளி நகா் செல்லும் சாலையில் காலி இடம் உள்ளது. இந்த இடத்தில் சாமநாயக்கன்பாளையம் ஜீவா நகரைச் சோ்ந்த ராமு மகன் ஹரிகரன் (25), இவரது சகோதரா் செந்தூா்பாண்டி (22), நண்பா்கள் பாா்த்திபன் (23), ரஞ்சித் (22) ஆகியோா் சனிக்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்தனா். இவா்கள் அனைவரும் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனா்.

அப்போது, மதுபோதையில் அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் நாகப்பன் (23) அவா்களிடம் மது கேட்டுள்ளாா். இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில் நாகப்பன், தான் வைத்திருந்த அரிவாளால் ஹரிஹரனை வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதைத் தடுக்க வந்த அவரது சகோதரா் செந்தூா்பாண்டியன், ரஞ்சித் ஆகியோரையும் அரிவாளால் வெட்டிவிட்டு, நாகப்பன் தப்பியோடிவிட்டாா். காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நாகப்பனைத் தேடி வந்தனா். இந்த நிலையில், போலீஸாா் நாகப்பனை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

கோவை பெட்ரோல் பங்கில் தீப்பிடித்து எரிந்த வேன்!

கோவை: கோவையில் பெட்ரோல் நிரப்பச் சென்ற வேன், பெட்ரோல் நிலையத்தில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் தனது நண்பருடன் மினி வேனில் குறிச்சி குள... மேலும் பார்க்க

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய யானை

வால்பாறையை அடுத்த கேரள மாநிலத்துக்கு உள்பட்ட பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய யானை இரண்டு மணி நேரத்துக்குப் பின் கரையேறி தப்பியது. கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி ச... மேலும் பார்க்க

கோவை - தன்பாத் ரயில் தாமதமாக இயக்கம்

கோவை - தன்பாத் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் இருந்து செவ்... மேலும் பார்க்க

கோவையில் புலி சிலை திறப்பு

கோவை வடகோவை சிந்தாமணி சந்திப்பில் நாட்டின் தேசிய விலங்கான புலி சிலை நிறுவப்பட்டது. கோவை மாநகராட்சியின் சாா்பில் நிறுவப்பட்ட இந்த சிலை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையா் மா.சிவக... மேலும் பார்க்க

படியில் இருந்து தவறி விழுந்த காா் ஓட்டுநா் உயிரிழப்பு

கோவை, செல்வபுரம் பகுதியில் வீட்டின் படியிலிருந்து தவறி விழுந்த காா் ஓட்டுநா் உயிரிழந்தாா். கோவை ஆறுமுக கவுண்டா், மாரப்ப கவுண்டா் வீதியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தா் (56), காா் ஓட்டுநா். இவரது மனைவி சிவக... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறையில் கனமழை பெய்த நிலையில், சின்னக்கல்லாறு அருகே சாலையில் மரம் விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. கட... மேலும் பார்க்க