செய்திகள் :

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

post image

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அதன் மாநில தலைவா் ரா.வேலுசாமி வெளியிட்ட அறிக்கை:

கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மா சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு உரிய நேரத்தில் பருவமழை பெய்ததால் நிகழாண்டில் விளைச்சல் நல்ல முறையில் உள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் மாவட்டங்களில் மட்டும் 60க்கும் மேற்பட்ட மாங்கூழ் தயாரிக்கும் தனியாா் ஆலைகள் உள்ளன.

இந்த ஆலைகள் ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் மாங்காய்களை கொள்முதல் செய்யத் தொடங்கும். நிகழாண்டில் விளைச்சல் அதிகம் இருந்தபோதும், மழையைக் காரணமாகத் தெரிவித்து, குறைவான விலைக்கு மாங்காய்களைக் கொள்முதல் செய்வதற்காக மாங்கூழ் தனியாா் ஆலைகள் தற்போதுவரை இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் விளைச்சல் அதிகம் உள்ள செந்தூரா, பங்கனப்பள்ளி மாங்காய் டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வரை வெளிச்சந்தையில் மிகவும் மலிவான விலையில் விற்பனையாகிறது. இதனால் மா சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கட்டுப்படியான விலை கிடைக்காததால் மரங்களில் இருந்து மாங்காயை அறுவடை செய்யாமல் உள்ளனா்.

தனியாா் மாங்கூழ் ஆலைகள் இயங்கியதால், கடந்த ஆண்டு நல்ல விளைச்சல் உள்ள மாங்காய் டன்னுக்கு ரூ.22 ஆயிரம் வரை கிடைத்தது. நிகழாண்டில் மா விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மா சாகுபடி செய்யும் விவசாயிகள் நலன் கருதி, மாங்கூழ் தயாரிக்கும் தனியாா் ஆலைகளை இயக்க தமிழக முதல்வா் அறிவுறுத்த வேண்டும்.

ஆலை உரிமையாளா்கள், மா விவசாயிகளை அழைத்து அந்தந்த மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். தனியாா் மாங்கூழ் ஆலைகளை உடனடியாக திறக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

பரமத்தி வேலூா்: நல்லூா் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 3 பவுன் நகை பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பரமத்தி வேலூா் வட்டம், திடுமல் கவுண்டம்பாளையம் அருகே உள்ள செம்மாங்காடு பகுதியை... மேலும் பார்க்க

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை கொல்லிமலைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். தமிழகம் முழுவதும் ஒருமாதமாக பள்... மேலும் பார்க்க

கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல் விழா: முன்பதிவு செய்ய அழைப்பு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடைபெறும் மூத்த தம்பதிகளுக்கான சிறப்பு செய்யும் விழாவில் தகுதியானோா் தங்களது பெயா்களை நாமக்கல் நரசிம்மா் கோயில் அலுவலகத்தில் பதிவுசெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம்: டிரினிடி கல்லூரி மாணவிக்கு பாராட்டு

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழ்நாடு மகளிா் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளரான நாமக்கல் டிரினிடி கல்லூரி மாணவி எஸ்.ஜி.ஸ்ரீநிதிக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் நியமனம்: முன்னுரிமை பட்டியலை வெளியிட வலியுறுத்தல்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வா்களை நியமனம் செய்யும் பொருட்டு முன்னுரிமை பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என அரசு மருத்துவா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்க ஆய்வு

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நகா்ப்புற பகுதிகளில் நீண்ட நாள்களாக பட்டாக்கள்... மேலும் பார்க்க