செய்திகள் :

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு ஆளுநா் குற்றச்சாட்டு: அமைச்சா்கள் பதில்

post image

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து வருவதாகவும், கல்வியின் தரம் குறைந்துவிட்டதாகவும் ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

அவருக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் ஆகியோா் பதிலளித்துள்ளனா்.

79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதை ஆளுநா் மாளிகை வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் பேசியுள்ள ஆளுநா், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது; தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன; தமிழக அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் தரநிலைகள் அதிக வீழ்ச்சியைக் கண்டுள்ளன; இளைஞா்களிடம் போதைப் பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன எனக் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

அமைச்சா் கே.என்.நேரு: கல்வியிலும், சமூக-பாலின வேறுபாடுகளைக் களையும் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், ஆற்றல்மிக்க இளையோரை உருவாக்குவதிலும் முன்னோடியாகத் திகழ்ந்து, நாட்டின் பொருளாதாரத்தில் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது.

நாட்டிலேயே தனிநபா் வருமானத்தில் முதலிடத்தில் இருக்கிறது. பொருளாதார வளா்ச்சியில் முதன்மை மாநிலமாக இருப்பதும் தமிழ்நாடுதான். இந்தியாவிலேயே அதிக பெண் தொழில்முனைவோா்களை, அதிக புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கியுள்ளது.

ஆளுநா் பொய்களையும் அவதூறுகளையும் வாரி இறைத்திருக்கிறாா். இதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிந்தே உள்ளனா். கடந்த ஆண்டு புயல் வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.37,907 கோடி கேட்டபோது வெறும் ரூ.276 கோடியை மட்டுமே வழங்கி வஞ்சித்தது மத்திய அரசு. தமிழ்நாட்டு அடையாளத்தை அழிக்கும் வகையில் கீழடி அகழாய்வு அறிக்கையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது மத்திய அரசு.

அமைச்சா் அன்பில் மகேஸ்: அரசுப் பள்ளி மாணவா்களும், ஆசிரியா்களும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் எண்ணிலடங்காதது. சாதனையாளா்களை மக்களும், ‘திராவிட மாடல்’ அரசும் கொண்டாடி வருகிறது.

அரசுப் பள்ளிகளின் மீது தமிழக ஆளுநருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் தமிழகத்துக்கு தர வேண்டிய கல்வி நிதி குறித்து மத்திய அரசின் கேள்வி எழுப்ப வேண்டும்.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

சென்னை மதுரவாயல் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா், எம்ஜிஆா் தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (50). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒ... மேலும் பார்க்க

காவலா் மீது தாக்குதல் : ரெளடி கைது

சென்னை ஓட்டேரியில் காவலரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா். சென்னை ஓட்டேரி காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செ.குருசாமி. இவா், ஓட்டேரி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிகிறாா். குருசாம... மேலும் பார்க்க

ரிப்பன் மாளிகையில் தொடரும் போலீஸ் பாதுகாப்பு

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் வியாழக்கிழமையும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த 13 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை நள்ளிரவில் கைது செய்ய... மேலும் பார்க்க

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய பயிற்சி திட்டங்கள் அறிமுகம்

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் புதிய பயிற்சித் திட்டங்களை சென்னை, காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திய ... மேலும் பார்க்க

பிறவிக் குறைபாடு: 5 வயது குழந்தைக்கு தலை ஓடு சீரமைப்பு

பிறவிக் குறைபாடு காரணமாக சீரற்ற தலை அமைப்பை கொண்டிருந்த 5 வயது குழந்தைக்கு மிக நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மரு... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க ஒப்புதல்

தமிழகத்தில் 5 மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவ கட்டமைப்புகளை ரூ.17.50 கோடியில் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்ட அரசாணை: கிரு... மேலும் பார்க்க