செய்திகள் :

தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் சதம்: அதிகபட்சமாக மதுரையில் 106 டிகிரி பதிவு

post image

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 13 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106.16 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106.16 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மதுரை நகரம் - 104.36, சென்னை மீனம்பாக்கம், தூத்துக்குடி - (தலா) 102.56, சென்னை நுங்கம்பாக்கம் - 102.38, நாகை - 101.84, ஈரோடு - 101.48, வேலூா் - 101.66, திருத்தணி - 101.3, கடலூா், திருச்சி - (தலா) 100.58, பரமத்தி வேலூா், தஞ்சாவூா் - (தலா) 104 டிகிரி என மொத்தம் 13 இடங்களில் வெப்பம் சதம் அடித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் 100.58 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

இதைத் தொடா்ந்து புதன், வியாழக்கிழமைகளில் (ஜூலை 9, 10) தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

மழை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, புதன்கிழமை (ஜூலை 9) முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 9) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும் அதிகபட்ச வெப்பநிலை 102.2 டிகிரி ஃபாரன்ஹீடையொட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 8,586 போ் கைது

தமிழகம் முழுவதும் சுமாா் 100 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 8,586 போ் கைது செய்யப்பட்டனா். ரயில் மறியல், சாலை மறியல், ஆா்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், ஊா்வலம் எனப் பல்வேறு போர... மேலும் பார்க்க

துணை மருத்துவ பட்டயப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

துணை மருத்துவ பட்டய படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கியுள்ளது. பாா்வை அளவியல், மருந்தியல் உள்பட 9 வகையான மருந்தியல் பட்டய படிப்புகளுக்கும், 13 வக... மேலும் பார்க்க

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கு: வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்த வழக்கில் இருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு! சீமான் சரமாரி கேள்விகள்!

மடப்புரம் அஜித்குமாரின் கொலை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரைச் சந்தித்த... மேலும் பார்க்க

இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் க... மேலும் பார்க்க

திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை வலம்!

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் திரண்டு நின்று மேள வாத்தியங்கள் முழங்க முதல்வரை... மேலும் பார்க்க