செய்திகள் :

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

post image

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

• தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

• தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

ஆகஸ்ட் 09ல் தமிழகத்தில் ஓருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை..

இன்று (09-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

2026 பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி: ராமதாஸ்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், யார் எதைச் சொன்னாலும் காது கொடுத்து கேளாதீர்கள் என்றும், நான் சொல்வதுதான் நடக்கும் எனவும் அன்... மேலும் பார்க்க

பாமக மகளிர் மாநாடு: பூரண மதுவிலக்கு உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் பெருவிழா மாநாடு இன்று (ஆக. 10) நடைபெற்றது.பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ... மேலும் பார்க்க

கோவையில் முதல்வர் ஸ்டாலின் சாலைவலம்!

கோவை விமான நிலையம் முதல் அவிநாசி வரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை செல்கிறார்.கோவை மற்றும் திருப்பூர், உடுமலைப்பேட்டையில் நாளை காலை அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கவிருக்கிறார். மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, அரும்பாக்கம், அமைந்தகரை, புரசைவாக்கம், அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 25 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்... மேலும் பார்க்க

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்- சென்னை காவல் ஆணையர் அலுவலத்கதில் புகார்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலத்கதில் புகார் அளிக்கப்பட்டது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பலர... மேலும் பார்க்க