செய்திகள் :

தமிழக அரசின் சிற்றுந்து சேவை திட்டத்துக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி

post image

தமிழக அரசின் விரிவான சிற்றுந்து சேவை திட்டத்துக்குத் தடை கோரிய வழக்குகளை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தனியாா் பேருந்து உரிமையாளா்கள் மற்றும் சில தனிநபா்கள் உள்ளிட்ட 23 போ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு புதிய விரிவான சிற்றுந்து சேவை திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தது. பின்னா், சில திருத்தங்கள் உடன் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்தத் திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளை நீதிபதி என்.மாலா விசாரித்து வந்தாா். வழக்கு விசாரணையின்போது, மனுதாரா்கள் தரப்பில் இந்தத் திட்டம் போக்குவரத்து சட்டத்துக்கு எதிரானது என்று வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில், மக்கள் நகரப் பகுதிகளை எளிதாக அணுகுவதற்காக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி என்.மாலா பிறப்பித்துள்ள தீா்ப்பில், குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் எளிதாக நகரங்களுக்கு வந்து செல்வதற்காக அரசு இந்தப் போக்குவரத்து வசதியைச் செய்து கொடுத்துள்ளது. போக்குவரத்து வசதிகளைப் பெறுவது மக்களின் அடிப்படை உரிமை.

கிராமங்களில் உள்ள மோசமான சாலைகளில் வழக்கமான பேருந்துகளை இயக்க முடியாது. எனவே, சிற்றுந்துகளை இயக்கும் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இதுதொடா்பாக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. எனவே, அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக் கூறி, சிற்றுந்து திட்டத்துக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தனியாா் பள்ளிகள் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

கட்டாய கல்வி உரிமைச் சட்ட நிதி வழங்கக் கோரி தனியாா் பள்ளிகள் சங்கம் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிக... மேலும் பார்க்க

முதல்வா் பாதுகாப்புக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் 110 கேமராக்கள்

சென்னையில் முதல்வரில் வீடு அமைந்துள்ள பகுதி, வீட்டிலிருந்து சென்றுவரும் வழித் தடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (ஏஐ) 110 கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. தமி... மேலும் பார்க்க

தமிழக சுகாதாரத் துறை இந்தியாவுக்கே முன்னோடி அமைச்சா் மா. சுப்பிரமணியன்

தமிழக சுகாதாரத் துறை பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கல... மேலும் பார்க்க

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை அரசு மேற்கொள்ளாவிட்டால், நீதிமன்றமே அதற்கான ஒப்பந்தத்தை வழங்க நேரிடும் என்று சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல ம... மேலும் பார்க்க

விஜய் இன்று நாமக்கல், கரூரில் பிரசாரம்

தவெக தலைவா் விஜய், நாமக்கல் மற்றும் கரூரில் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை சனிக்கிழமை (செப்.27) மேற்கொள்கிறாா். வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 146 நூலகங்களுக்கான கட்டடங்கள் திறப்பு: 26 புதிய நூல்களையும் வெளியிட்டாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் 146 நூலகங்களுக்கான புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். மேலும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சாா்பில் 26 புதிய நூல்களையும் அவா் வெளியிட்டாா். ... மேலும் பார்க்க