செய்திகள் :

'தமிழ்த்தேசியவாதிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினால் சட்ட ஒழுங்கு கெடுமா? - அரசுக்கு வேல்முருகன் கேள்வி

post image
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான வேல்முருகன் புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, 'தமிழ்த்தேசிய போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடுமா?' என அரசை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
வேல்முருகன்

பத்திரிகையாளர்களிடம் பேசிய வேல்முருகன், 'கனிமவளக் கொள்ளை இயற்கைவளக் கொள்ளைக்கு எதிராக எப்போதுமே நின்றிருக்கிறோம். புதுக்கோட்டையில் ஜகபர் அலி கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். தவாக சார்பில் அவரின் குடும்பத்தினரை சந்தித்து 1 லட்ச ரூபாய் நிதி வழங்கவிருக்கிறோம். அதேமாதிரி, அவரின் கொலையில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் காவல்துறை விரைந்து கைது செய்ய வேண்டும். தமிழ்த்தேசிய போராளியான முத்துகுமாரின் 14 வது ஆண்டு நினைவேந்தல் வீரவணக்கத்திற்காகத்தான் புதுக்கோட்டை வந்திருக்கிறேன்.

தமிழ்த்தேசிய போராளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடுமா? உயர் நீதிமன்றம் வரை சென்றுதான் வீரவணக்கம் செலுத்த அனுமதி பெற வேண்டியிருக்கிறது. காவல்துறையும் அதை கையில் வைத்திருக்கும் முதல்வரும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

வேல்முருகன்

விஜய் கேட்காமலேயே ஆளுநரை அவர் சந்தித்த ஒரு சில வாரங்களில் 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதில் அரசியல் இருப்பதாகவே பார்க்கிறேன்.' என்றார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Manipur: ``குடியரசு தலைவர் ஆட்சியைத் திரும்பப் பெறுங்கள்" - மணிப்பூரில் போராட்டத்தில் இறங்கிய மக்கள்

மணிப்பூரில் 2024 மே மாதத்தில் குக்கி, மெய்தி சமூகத்தினருக்கு இடையே வெடித்த மோதல், இன்னும் ஓயாமல் இருக்கிறது. பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களைப் பிரதமர் மோடி ஒருமுறை கூட நேரில் சென்று பார்க்கவில்... மேலும் பார்க்க

NEP: ``தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லையென்றால் நிதி கிடைக்காது" - மத்திய அமைச்சர் ஓப்பன் டாக்

மத்திய அரசின் மும்மொழி கொள்கை உள்ளிட்ட காரணங்களால் தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு இன்னும் ஏற்காமல் இருக்கிறது. மேலும், தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால், கல்விக்கு மத்திய அரசு தரப்பில் ஒதுக்க வேண்... மேலும் பார்க்க

'கள்ளச்சாராய வியாபாரத்தை மூடி மறைக்கும் காவல்துறையே...' - கடுமையாக சாடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

மயிலாடுதுறையில் கள்ளச்சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்ட விவகாரத்தில் ஹரிஸ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், 'கள்ளச்சாராயத்தை ஒழிக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்ல... மேலும் பார்க்க

இரட்டைப் படுகொலை: `விசாரணைக்கு முன்பே தீர்ப்பெழுதுவதுதான் ஸ்டாலின் மாடலா?'- சாடும் எதிர்க்கட்சிகள்

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் இளைஞர்கள் இரண்டு பேர் நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த மூவரால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தைப் பொறுத்த... மேலும் பார்க்க

'பிரசாந்த் கிஷோர் தான் வர வேண்டுமா... உங்களுக்கு மூளை இல்லையா?' - சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"எனக்கு யாரிடம் இருந்து பாதுகாப்பு தேவை இருக்கிறது. இந்த மக்களுக்காக களத்துக்... மேலும் பார்க்க

'கோபாலபுரம் தாண்டி வெளியில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' - அண்ணாமலை

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அமெரிக்காவில் தற்போது 29 லட்சம் இந்தியர்கள் இருக்கிறார்கள். அமெரிக்க அரசு 7,50,000 பேர் விதிகளை மீறி அங்கு த... மேலும் பார்க்க