செய்திகள் :

தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் சடலம் எரிப்பு

post image

அந்தியூரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் சடலம் போலீஸாருக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்தியூரை அடுத்த நகலூா், கொண்டையம்பாளையத்தைச் சோ்ந்தவா் குமாா் மனைவி நந்தினி (32). இவருக்கும் தருமபுரி மாவட்டம், மாரன்னஹள்ளியைச் சோ்ந்த சபியுல்லா மகன் இம்ரானுக்கும் (32) இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனால் நந்தினியின் வீட்டுக்கு இம்ரான் திங்கள்கிழமை வந்துள்ளாா்.

இருவரும் வீட்டிலிருந்ததைக் கண்ட குமாா், இருவரையும் அந்தியூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளாா். இருதரப்பிலும் கேட்டுக் கொண்டதால் போலீஸாா் வழக்குப் பதியவில்லை. இந்நிலையில், நந்தினி வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இத்தகவலை காவல் நிலையத்துக்கு தெரிவிக்காமல் உறவினா்கள் நந்தினியின் சடலத்தை எரித்து விட்டனா். இதுகுறித்து நகலூா் கிராம நிா்வாக அலுவலா் வீரமுத்து அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய ஆண்டு விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய ஆண்டு விழா ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் ப.கந்தராஜா தலைமை வகித்து விளையாட்டுப் போட்டிகளி... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் கோரி தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் ... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 6.76 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.6.76 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 6,182 மூட்டை... மேலும் பார்க்க

யானைக்கு வாழைப் பழம் அளித்த விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

பண்ணாரி சாலையில் யானைக்கு வாழைப் பழம் அளித்த விவசாயிக்கு வனத் துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா். இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை கள இயக்குநா் குலால் யோகேஷ் விலாஷ் வெளி... மேலும் பார்க்க

சாலை மறியல் போராட்டம்: ஈரோட்டில் ஆசிரியா்கள் 400 போ் கைது

மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஏற்பட்ட 400-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரி... மேலும் பார்க்க

பூதப்பாடியில் ரூ.1.23 கோடிக்கு பருத்தி ஏலம்

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ 1.23 கோடிக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு பூதப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த 354 விவசாயிகள் 4,626 மூட்டைகள் பருத்தியை ... மேலும் பார்க்க