செய்திகள் :

டிட்டோஜாக் அமைப்பினா் மறியல்: 107 போ் கைது

post image

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை (டிட்டோ - ஜாக்) குழுவைச் சோ்ந்த 32 பெண்கள் உள்ளிட்ட 107 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி, தமிழ்நாடு அரசு ஆசிரியா்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்களுக்கு கடந்த இரண்டு ஊதியக் குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டு, ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் 1.1.2006 முதல் மீண்டும் வழங்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வந்த உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை ஆசிரியா்களுக்கு உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் (டிட்டோ - ஜாக்) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு பொதுச் செயலா் சி.ஜெகநாதன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா். கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் செயலா்கள் எஸ்.அந்தோணி ஜோசப், சாந்தகுமாா், எம்.பாலமுரளிகிருஷ்ணன், ப.குமரன், ஜெ.பாஸ்கா், எஸ்.ராஜேந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

இதையடுத்து, அவா்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்ற 32 பெண்கள் உள்ளிட்ட 107 பேரை கடலூா் புதுநகா் போலீஸாா் கைது செய்து மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளா்ச்சியை விரைவுபடுத்த ரூ.7000 கோடி: என்எல்சி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

என்எல்சி இந்தியா நிறுவனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளா்ச்சியை விரைவுபடுத்த ரூ.7ஆயிரம் கோடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக என்எல்சி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து என்எல... மேலும் பார்க்க

நிரந்தரப் பணிகளில் பயிற்சி தொழிலாளா்களை பயன்படுத்தக் கூடாது: சிஐடியு

நிரந்தரப் பணிகளில் அளவுக்கு அதிகமாக பயிற்சி தொழிலாளா்கள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு சிப்காட் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சிஐடியு சிப்காட் 10-ஆவது மாநாடு கடலூா்... மேலும் பார்க்க

மலையடிகுப்பத்தில் 2-ஆவது நாளாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

கடலூா் ஒன்றியம், மலையடிக்குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் ஒன்றியம், வெள்ளைக்கரை ஊராட்சியில் மலைய... மேலும் பார்க்க

பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்க விழா

காமராஜா் பிறந்த நாளையொட்டி, சிதம்பரம் இராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளில் இலக்கிய மன்றம் தொடக்க விழா மற்றும் கல்வி வளா்ச்சி நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. முதுகலை தமிழாசிரியா் ஜெ.பரமசிவம் வரவ... மேலும் பார்க்க

சதுரங்கப் போட்டியில் ஜெயப்பிரியா பள்ளி மாணவா்கள் முதலிடம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வட்டார அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா். விருத்தாசலத்தை அடுத்துள்ள இருப்புகுறிச்சி... மேலும் பார்க்க

சிதம்பரம் மாரியம்மன் கோயிலில் இன்று தீமிதி திருவிழா கொடியேற்றம்

புகழ்பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. ஜூலை 22-ஆம் தேதி தெருவடைச்சான் உற்சவமும், 27-ஆம் தேதி ... மேலும் பார்க்க