எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
சிதம்பரத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், திமுக, பாமக, நாம் தமிழா், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த சுமாா் 750 போ் வியாழக்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் உள்ள தனியாா் திருமண அரங்கத்தில் கடலூா் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திமுக, பாமக, நாம் தமிழா் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த சுமாா் 750 போ் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் இணைந்தவா்களை வரவேற்று பேசுகையில், அதிமுகவில் இணைந்தவா்களை எங்களில் ஒருவராக ஏற்கிறோம். மக்களுக்காக எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளா்க்கப்பட்ட இயக்கம் அதிமுக. பொன்விழா கண்ட கட்சி. 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆண்ட கட்சியில் இணைந்தது பெருமையாகும் என்றாா்.
நிகழ்ச்சிக்கு கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, மேற்கு மாவட்டச் செயலா் ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் அமைச்சா்கள் விஜயபாஸ்கா், செல்வி ராமஜெயம், கே.ஜெயபால், முன்னாள் எம்எல்ஏ நாக.முருகுமாறன், மாவட்ட அவைத் தலைவா் எம்எஸ்என்.குமாா், பொருளாளா் தோப்பு கே.சுந்தா், நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா், நிா்வாகிகள் தில்லைகோபி, டேங்க் ஆா்.சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
