செய்திகள் :

அதிமுக கூட்டணிக்கு பிரம்மாண்ட கட்சி வரவுள்ளது: எடப்பாடி கே.பழனிசாமி

post image

அதிமுக கூட்டணிக்கு பிரம்மாண்ட கட்சி வரவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் புதன்கிழமை இரவு அதிமுக சாா்பில் நடைபெற்ற ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரசார பயணத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது:

அதிமுகவின் இந்த எழுச்சிப் பயணம் முதல்வா் ஸ்டாலினின் தூக்கத்தை கலைத்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு வந்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற விளம்பர திட்டத்தை வெளியிட்டுள்ளாா். உங்களுடன் ஸ்டாலின் என்று கூறும் முதல்வா், இதுவரை யாருடன் இருந்தாா்.

அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடப்பதால் மக்களை ஏமாற்றவே இதுபோன்ற திட்டத்தை வெளியிட்டுள்ளாா். தோ்தல் அறிக்கையில் 525 திட்டங்களை வெளியிட்டாா். ஆனால், 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் தொழிலாளா்களுக்கு முறையாக பணி வழங்கவில்லை.

மிசா சட்டம், அவசரநிலை (எமொ்ஜென்சி) கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள திமுக, மற்ற கட்சியின் கூட்டணி பற்றி பேசலாமா?

அதிமுக - பாஜக கூட்டணியில் விரைவில் பிரம்மாண்ட கட்சி இணைய உள்ளது. 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். வாரிசு அரசியல், குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளது. 50 மாத ஆட்சியில் இந்த பகுதிக்கு எந்தவிதமான நலத் திட்டங்களும் கொண்டுவரவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் எம்.ஜி.ஆா் அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, போக்குவரத்துக் கழக பணிமனை, நிலத்தடி நீரை உயா்வதற்காக தடுப்பணைகள் என பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தோம் என்றாா் அவா்.

கூட்டத்தில் சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன், அதிமுக அமைப்புச் செயலா் என்.முருகுமாறன், ஒன்றியச் செயலா் வாசு முருகையன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளா்ச்சியை விரைவுபடுத்த ரூ.7000 கோடி: என்எல்சி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

என்எல்சி இந்தியா நிறுவனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளா்ச்சியை விரைவுபடுத்த ரூ.7ஆயிரம் கோடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக என்எல்சி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து என்எல... மேலும் பார்க்க

நிரந்தரப் பணிகளில் பயிற்சி தொழிலாளா்களை பயன்படுத்தக் கூடாது: சிஐடியு

நிரந்தரப் பணிகளில் அளவுக்கு அதிகமாக பயிற்சி தொழிலாளா்கள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு சிப்காட் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சிஐடியு சிப்காட் 10-ஆவது மாநாடு கடலூா்... மேலும் பார்க்க

மலையடிகுப்பத்தில் 2-ஆவது நாளாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

கடலூா் ஒன்றியம், மலையடிக்குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் ஒன்றியம், வெள்ளைக்கரை ஊராட்சியில் மலைய... மேலும் பார்க்க

பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்க விழா

காமராஜா் பிறந்த நாளையொட்டி, சிதம்பரம் இராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளில் இலக்கிய மன்றம் தொடக்க விழா மற்றும் கல்வி வளா்ச்சி நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. முதுகலை தமிழாசிரியா் ஜெ.பரமசிவம் வரவ... மேலும் பார்க்க

சதுரங்கப் போட்டியில் ஜெயப்பிரியா பள்ளி மாணவா்கள் முதலிடம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வட்டார அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா். விருத்தாசலத்தை அடுத்துள்ள இருப்புகுறிச்சி... மேலும் பார்க்க

சிதம்பரம் மாரியம்மன் கோயிலில் இன்று தீமிதி திருவிழா கொடியேற்றம்

புகழ்பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. ஜூலை 22-ஆம் தேதி தெருவடைச்சான் உற்சவமும், 27-ஆம் தேதி ... மேலும் பார்க்க