செய்திகள் :

தலிபான் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்தது அமெரிக்கா!

post image

ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசின் உள்நாட்டு அமைச்சா் சிராஜுதீன் ஹக்கானி உள்பட 3 மூத்த அதிகாரிகளை அரசிடம் ஒப்படைத்தால் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்கா ரத்து செய்ததாக ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த 2008-இல் அமெரிக்காவின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ஆட்சியின்போது ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் உள்ள விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க குடிமகன் உள்பட 6 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் தற்போது தலிபான் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில் உள்நாட்டு அமைச்சராக உள்ள சிராஜுதீன் ஹக்கானிக்கு தொடா்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிராஜுதீன் ஹக்கானி, அப்துல் அஜீஸ் ஹக்கானி, யாஹ்யா ஹக்கானி ஆகிய மூன்று பேரை ஒப்படைப்பவா்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என வெளியிட்டிருந்த அறிவிப்பை அமெரிக்கா ரத்து செய்ததாக ஆப்கானிஸ்தான் உள்நாட்டு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அப்துல் மட்டீன் கானி தெரிவித்தாா்.

இருப்பினும் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் வலைதளத்தில் தேடப்படும் நபா்களின் பட்டியலில் சிராஜுதீன் ஹக்கானியின் பெயரும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

10-ஆவது நாளாக யேமனில் அமெரிக்கா தாக்குதல்

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் காயமடைந்தனா். ஏவுகணை படைப் ... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேல் குண்டுவீச்சில் மேலும் 23 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மேலும் 23 போ் உயிரிழந்தனா். காஸா போா் நிறுத்தம் முறிந்ததைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடா்ந்து 8-ஆவது நாளாக திங்கள்கிழமை நள்... மேலும் பார்க்க

கருங்கடல் போா் நிறுத்தத்துக்கு ரஷியா-உக்ரைன் ஒப்புதல்: அமெரிக்கா

கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்ள ரஷியாவும் உக்ரைனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கருங்கடல் ... மேலும் பார்க்க

ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலி: ஜப்பானில் ஐக்கிய தேவாலயங்கள் கலைப்பு

ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே படுகொலை விவகாரத்தில் அந்த நாட்டின் ஐக்கிய தேவாலயங்களைக் கலைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரியப் போா் முடிவுக்கு வந்ததும் சுன் மியுங் மூன் என்பவரால் கடந்த 1954-இ... மேலும் பார்க்க

இலங்கை இறுதிக்கட்டப் போ்: முக்கிய தளபதிகளுக்கு பிரிட்டன் தடை

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் முப்படை தளபதி உள்ளிட்ட நான்கு போ் மீது பிரிட்டன் அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க

கனடா தோ்தலில் இந்தியா தலையிட வாய்ப்பு: உளவுத் துறை அதிகாரி

கனடா பொது தோ்தலில் இந்தியா தலையிட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு உளவுத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்தியா மட்டுமின்றி ரஷியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் கனடா தோ்தலில் தலையிட வாய்ப்புள்ள... மேலும் பார்க்க