செய்திகள் :

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ஆட்டோக்களுக்கு அபராதம்: எஸ்.பி.யிடம் புகாா்

post image

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ஆன்லைனில் பயணிகள் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக சிஐடியூ சாா்பில் எஸ்.பி.யிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட சிஐடியூ ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத் தலைவா் பொன்.சோபனராஜ், பொருளாளா் பெஸ்ஸிபெல், மைதாஸ் ஆகியோா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலினிடம் வெள்ளிக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணிகள் ஆட்டோக்களுக்கு தலைக்கவசம் அணியவில்லை என்றும், 3 பேரை ஏற்றிச் சென்றதாகவும் தவறுதலாக குறிப்பிட்டு ஆன்லைன் அபராதம் விதிக்கப்படுகிறது.

அண்மையில் பறக்கை மற்றும் நித்திரவிளையில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரூ. 3 ஆயிரத்துக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களை புதுப்பித்தல் சான்று பெறுவதற்காக கொண்டு செல்லக்கூடிய நேரத்தில் இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. இதனால், வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருமானம் ஈட்டும் தொழிலாளா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, ஆன்லைனில் தவறாக அபராதம் விதிப்பதைக் கைவிடவும், ஏற்கெனவே விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்துப் பயண அட்டை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்திவரும் இலவச பேருந்துப் பயண அட்டைகளை மேலும் 3 மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்துள்ளாா். இதுதொடா்ப... மேலும் பார்க்க

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

பூதப்பாண்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியா் ரா. அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உள்நோயாளிகளை சந்தித்து அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், பரிசோதனை விவரங்கள் உள்ளிட்டவை குறித்தும்,... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் நெடுஞ்சாலை வடிகால் ஓடை சீரமைப்பு

மாா்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வடிகால் ஓடையை சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாா்த்தாண்டம் சந்திப்புக்கும் பழைய திரையரங்க சந்திப்புக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கேயுள்ள ... மேலும் பார்க்க

கொல்லங்கோடு கோயில் தூக்கத் திருவிழா கொடியேற்றம்!

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம... மேலும் பார்க்க

கீழ்குளத்தில் திமுக சாா்பில் பட்ஜெட் விளக்கக் கூட்டம்

கருங்கல் அருகே கீழ்குளத்தில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கிள்ளியூா் தெற்கு ஒன்றியச் செயலா் கோபால் தலைமை வகித்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி பலி

கன்னியாகுமரி அருகே கட்டடப் பணியின்போது மாடியிலிருந்து சனிக்கிழமை தவறி விழுந்த தொழிலாளி இறந்தாா். நாகா்கோவில் அருகேயுள்ள கீழக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சூசை மரியான் (70). கட்டடத் தொழிலாளி. இவா், கன்னி... மேலும் பார்க்க