செய்திகள் :

தலைமைச் செயலகத்தில் ஐ. பெரியசாமி அறைக்கு பூட்டு! சென்னை வீட்டில் அறைகளின் பூட்டு உடைப்பு?

post image

பணமோசடி வழக்கில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் ஐ. பெரியசாமி அறையின் கதவை தலைமைச் செயலக அதிகாரிகள் பூட்டிச் சென்றனர்.

இதற்கிடையே, சென்னை பசுமைவழிச்சாலையில் அமைந்துள்ள ஐ. பெரியசாமியின் பங்களாவில், முதல் தளத்தில் இருந்த இரண்டு அறைகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், அதனை உடைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை மற்றும் திண்டுகள் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித் துறை திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மற்றும், அவருக்குத் தொடர்புடையவர்களின் வீடுகளிலும் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை பசுமைவழிச்சாலையில் திமுக அமைச்சர் ஐ பெரியசாமியின் இல்லத்திலும் மற்றொரு இடமான சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விடுதிகளில் உள்ள அமைச்சரின் அறையிலும் சோதனை நடந்து வருகிறது.

அமைச்சரின் சென்னை வீட்டின் முதல் தளத்தில் இருந்த இரண்டு அறைகள் பூட்டப்பட்டிருந்ததால், தபேதாரிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டு, அறைகளின் பூட்டை உடைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சட்டமன்ற உறுப்பினரின் விடுதியில் பெரியசாமியின் அறையில் சோதனை செய்தபோது அங்கு சாவி ஒன்று கிடைத்துள்ளதால், அது குறித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி அடுத்த கட்டமாக தலைமைச் தலைமை செயலகத்தில் உள்ள ஐ. பெரியசாமியின் அறையை எப்போது வேண்டுமானாலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யலாம் என்பதால், முன்னெச்சரிக்கை காரணமாக தலைமைச் செயலக அதிகாரிகள் அமைச்சர் ஐ. பெரியசாமியின் அலுவலகக் கதவை பூட்டிவிட்டுச் சென்றனர்.

ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள், தலைமைச் செயலகத்தில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறைக்குள் சோதனை செய்தது பேசுபொருளாகியிருந்த நிலையில், தற்போது ஐ. பெரியசாமி அறையிலும் சோதனை நடத்தப்படுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

சுற்றுலா வளா்ச்சிக் கழக வருவாய் 5 மடங்கு அதிகம்: தமிழக அரசு தகவல்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் வருவாய் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளி... மேலும் பார்க்க

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் எந்த முன்னேற்றமும் இல்லை: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

இன்று காங்கிரஸ் மாவட்ட தலைவா்கள் கூட்டம்

சென்னை சத்தியமூா்த்தி பவனில், மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் கூட்டம் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசியல் சூழல், முன்னாள் பிரதமா் ரா... மேலும் பார்க்க

ஊராட்சிப் பிரதிநிதிகள் - அலுவலா்கள் பயிற்சியில் முதலிடத்தில் தமிழகம்!

ஊராட்சிப் பிரதிநிதிகள், ஊரக வளா்ச்சி அலுவலா்களுக்குப் பயிற்சி அளிப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையிலான காலத்தில் 16 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்ததுடன், அந்தப்... மேலும் பார்க்க

20 உயா்நிலைப் பள்ளிகள் தரம் உயா்வு: அரசாணை வெளியீடு

பள்ளிக் கல்வித் துறையில் 20 அரசு உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம்... மேலும் பார்க்க

பாஜகவின் கிளை அமைப்பாக மாறிய தேர்தல் ஆணையம்- முதல்வர் ஸ்டாலின்

சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு மாற்றி உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் அவர் பேசுகையில், சேலத்தில் சிறைத் தியாகிகள் நினைவாக விரை... மேலும் பார்க்க