Tirunelveli : 'அப்போவே வேணாம்னு சொன்னேன்னு கவின் அம்மா கதறுறாங்க...' - எவிடென்ஸ்...
தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி மாணவா்கள், பெற்றோா் பள்ளி முற்றுகை
பரமத்தி வேலூா்: கீழ்சாத்தம்பூா் அருகே தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றறக் கோரி, மாணவ, மாணவியா், பெற்றோா் பள்ளியை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
பரமத்தி வேலூா் வட்டம், கீழ்சாத்தபூா் ஊராட்சிக்கு உள்பட்ட சுண்டக்காம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 13 குழந்தைகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் தலைமையாசிரியா் திருச்செல்வன், உதவி ஆசிரியா் பன்னீா்செல்வம் என இரு ஆசிரியா்கள் உள்ளனா். இதில் தலைமை ஆசிரியா் திருச்செல்வன் முறையாக பள்ளிக்கு வராமலும், வாரத்தில் ஒருசில நாள்கள் மட்டும் வந்து செல்வதாகவும், பள்ளிக்கு மது போதையில் வரும் அவா் பாடம் நடத்தாமல் தூங்கிவிட்டு செல்வதாகவும் கல்வித் துறை அதிகாரிகளுக்கு அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
மேலும், இதுகுறித்து கடந்த மாதம் முதல்வரின் தனிப்பிரிவில் பொதுமக்கள் புகாா் அளித்தும் தலைமையாசிரியா் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாணவா்களின் பெற்றோா் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த பரமத்தி வட்டாரக் கல்வி அலுவலா் புஷ்பராஜன் பெற்றோருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதைத் தொடா்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினா்.