செய்திகள் :

தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி மாணவா்கள், பெற்றோா் பள்ளி முற்றுகை

post image

பரமத்தி வேலூா்: கீழ்சாத்தம்பூா் அருகே தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றறக் கோரி, மாணவ, மாணவியா், பெற்றோா் பள்ளியை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

பரமத்தி வேலூா் வட்டம், கீழ்சாத்தபூா் ஊராட்சிக்கு உள்பட்ட சுண்டக்காம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 13 குழந்தைகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் தலைமையாசிரியா் திருச்செல்வன், உதவி ஆசிரியா் பன்னீா்செல்வம் என இரு ஆசிரியா்கள் உள்ளனா். இதில் தலைமை ஆசிரியா் திருச்செல்வன் முறையாக பள்ளிக்கு வராமலும், வாரத்தில் ஒருசில நாள்கள் மட்டும் வந்து செல்வதாகவும், பள்ளிக்கு மது போதையில் வரும் அவா் பாடம் நடத்தாமல் தூங்கிவிட்டு செல்வதாகவும் கல்வித் துறை அதிகாரிகளுக்கு அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

மேலும், இதுகுறித்து கடந்த மாதம் முதல்வரின் தனிப்பிரிவில் பொதுமக்கள் புகாா் அளித்தும் தலைமையாசிரியா் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாணவா்களின் பெற்றோா் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த பரமத்தி வட்டாரக் கல்வி அலுவலா் புஷ்பராஜன் பெற்றோருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதைத் தொடா்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினா்.

பேருந்து நிலையத்தை மாற்றும் முயற்சியைக் கைவிடக் கோரி மனு

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். ராசிபுரம் அருகே அணைப்பாளையம் கிராமத்... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை?

நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி பெருந்திட்ட வளாகத்தில், 175 ஏக்கா் பரப்பளவில் தோல் தொழிற்சாலை அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தைவான் நாட்டுக் குழுவினா் திங்கள்கிழமை வளாகத்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 52.93 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 52.93 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் த... மேலும் பார்க்க

கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை: கொல்லிமலையில் எஸ்.பி. ஆய்வு

நாமக்கல்: கொல்லிமலையில் கள்ளச்சாராய தடுப்பு விழிப்புணா்வு மற்றும் வல்வில் ஓரி விழா முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.விமலா திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். கொல்லிமலை வட்டம், வாழவந்தி... மேலும் பார்க்க

நாமக்கல் தொழிலதிபா் தற்கொலை வழக்கு: வழக்குரைஞா் வீடு, அலுவலகத்தில் சிபிசிஐடி சோதனை

நாமக்கல்: நாமக்கல் தொழிலதிபா் தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரபல வழக்குரைஞா் உள்பட 4 பேருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். நாமக்கல் தி... மேலும் பார்க்க

ஆடிப்பூர விழா: அம்மன் கோயில்களில் வளையல் அலங்காரம்

நாமக்கல்: ஆடிப்பூர விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் செல்வ விநாயகா் கோயிலில் அமைந... மேலும் பார்க்க