செய்திகள் :

தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம்: மாணவா்கள், பெற்றோா் போராட்டம்

post image

திருவள்ளூா் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடம்பத்தூா் ஒன்றியம், கொம்மந்தாங்கல் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜமீலா என்பவா் தலைமை ஆசிரியராக பணியில் சோ்ந்தாா். அப்போது 3 மாணவா்கள் மட்டுமே பயின்று வந்தனா்.

இதனால் ஓராசிரியா் பள்ளியாக இருந்ததால் மூட தமிழக அரசு முடிவு செய்த நிலையில், தலைமை ஆசிரியா் கொம்மந்தாங்கல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களை நேரில் சந்தித்து ஆங்கில வழி கல்வியை கொண்டு வருவதாக உறுதி அளித்தாா்.

அதன்பேரில் பணம் கொடுத்து தனியாா் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு அனுப்புவதை மாற்றி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கச் செய்தாா்.

தற்போது 40-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது தலைமை ஆசிரியா் மற்றும் ஒரு உதவி ஆசிரியா் என 2 ஆசிரியா்கள் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி தலைமை ஆசிரியரை பேரம்பாக்கம் அருகில் உள்ள இருளஞ்சேரி பள்ளிக்கு மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து அவா் பணி மாறுதல் பெற்று சென்றாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த பற்றோா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மீண்டும் பழைய தலைமை ஆசிரியரையே நியமிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கடம்பத்தூா் வட்டார கல்வி அலுவலா் மற்றும் மப்பேடு போலீஸாா் விரைந்து வந்து பேச்சு நடத்தினா். ஆட்சியா் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து கலைந்து சென்றனா்.

திருவள்ளூர் மகளிர் காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி!

திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு குடும்ப பிரச்னையால் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.திருவள்ளூர் அருகே மணவாளநகர் பட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர்... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வழக்கு: கைதானவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் மனு

கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள வடமாநில இளைஞரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆரம்பாக்கம் போலீஸாா் ம... மேலும் பார்க்க

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்லத் தடை

ஸ்ரீ ஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் வரும் 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு பகுதி மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பழவேற்காடு அடுத்த ஆந்திர மாநிலத்தில் உள்... மேலும் பார்க்க

திருநங்கைகள் நூதன போராட்டம்

இலவச வீட்டு மனை வழங்கக்கோரி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருநங்கைகள் 450-க்கும் மேற்பட்டோா... மேலும் பார்க்க

ராணுவத்தினருக்கு மறுவாழ்வுக்காக வழங்கிய விளைநிலத்திற்கு பட்டா வழங்கக்கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

இரண்டாம் உலகப்போரில் பணிபுரிந்த ராணுவத்தினருக்கு மறுவாழ்வுக்காக வழங்கப்பட்ட விளைநிலங்களுக்கு அரசு மற்றும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டா வழங்காததை கண்டித்து கூடப்பாக்கம் முன்னாள் ராணுவத்தினா் குடி... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிப்பூரம்: பக்தா்கள் நோ்த்திக் கடன்

திருத்தணி முருகன் கோயில் ஆடிப்பூர விழாவில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் உடலில், அலகு குத்தியும், காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.இதையொட்டி, மூலவருக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப... மேலும் பார்க்க