செய்திகள் :

தவெக - திமுக இடையில்தான் போட்டி: பொதுக்கூட்டத்தில் வெளிவந்த லியோ!

post image

அடுத்தாண்டு தேர்தலில் திமுகவுடன் மட்டுமே போட்டி என்று கட்சி பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கூறினார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது பொதுக் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்று வருகின்றன.

பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது, ``சீக்ரெட் ஓனர் பிரதமர் மோடிஜி அவர்களே. உங்கள் பெயரைச் சொல்ல எங்களுக்கு பயம் என்று சொல்கிறார்கள். மத்தியத்தில் ஆள்பவர்கள் என்று முன்னரே நேரடியாக சொல்லி விட்டோம். தமிழ்நாடு தமிழர்களைக் கண்டு ஏன் அலர்ஜி?

ஜிஎஸ்டியை சரியாக வாங்கிக் கொள்கிறார்கள்; ஆனால், பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில்லை. குழந்தைகளின் கல்விக்கும் நிதி ஒதுக்குவதில்லை; ஆனால், மும்மொழிக் கொள்கையை திணிக்கிறார்கள். பலருக்கு தண்ணீர் காட்டிய மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாதுகாப்பது எங்கள் உரிமை; கடமை. திமுக, வாக்குகளுக்காக காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணி; கொள்ளையடிப்பதற்காக பாஜகவுடன் மறைமுக அரசியல் கூட்டணி. தமிழ்நாடு இதுவரையில் கண்டிராத ஒரு தேர்தலை அடுத்தாண்டு சந்திக்கும். தவெக - திமுக இடையில் மட்டும்தான் போட்டி’’ என்று தெரிவித்தார்.

நான்காண்டுகளில் 1,584 உயா்நிலை பாலங்கள்

தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் 1,584 உயா்நிலை பாலங்கள் கட்டப்பட்டுள்ளன என்றும், மேலும் ரூ.858 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் ப... மேலும் பார்க்க

இரு ஆண்டுகளில் ரூ.14,466 கோடியில் பணிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 1,253 பணிகள் ரூ.14,466 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். பேரவையில் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து... மேலும் பார்க்க

மா.அரங்கநாதன் இலக்கிய விருது-2025: தமிழவன், ப.திருநாவுக்கரசுக்கு வழங்கப்படுகிறது

நிகழாண்டுக்கான ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருது’ பேராசிரியா் தமிழவன் மற்றும் ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. இலக்கிய உலகின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவா் மா.அரங்நாதன். அவரின் நினைவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் 1.17 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஒரு மாதத்தில் 1.17 லட்சம் மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:... மேலும் பார்க்க

நீா்நிலை சீரமைப்பு: இளைஞா்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

நீா்நிலை சீரமைப்புப் பணியில் இளைஞா்கள் ஈடுபட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: இளம் வயதிலேயே பொதுச் சிந்தன... மேலும் பார்க்க

பிரதமர் வருகை: ஏப். 4 - 6 வரை மீன்பிடிக்கத் தடை

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி ஏப். 4 - 6ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6ஆம் தேதி பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வருவதையொ... மேலும் பார்க்க