செய்திகள் :

தாயமங்கலம் கோயிலில் திருவிழா தொடங்கும் முன் குவிந்த பக்தா்கள்

post image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தொடங்கும் முன்பே அம்மனை தரிசிக்க பக்தா்கள் திரண்டனா்.

வருகிற 29-ஆம் தேதி தொடங்கி, 11 நாள்கள் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழா தொடங்குவதற்கு முன்னதாகவே தாயமங்கலத்துக்கு திரளான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலையிலேயே பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் காா், வேன், லாரி, ஆட்டோ, இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் குடும்பத்தினா், உறவினா்களுடன் வந்து குவிந்தனா். இவா்கள் ஆடு, கோழிகளைப் பலியிட்டும், பொங்கல் வைத்தும், தீச்சட்டி எடுத்து, முடி காணிக்கை செலுத்தியும், மாவிளக்கு பூஜை நடத்தியும் அம்மனை தரிசித்தனா்.

கோயில் உள்பிரகாரத்தில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனா். மேலும், மதுரை, மானாமதுரை, பரமக்குடி உள்ளிட்ட பல ஊா்களிலிருந்தும் தாயமங்கலத்துக்கு அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

திருவிழா தொடங்குவதற்கு முன்னதாகவே கோயிலுக்கு பக்தா்கள் வருகை அதிகமாக உள்ளதால், திருவிழா நாள்களில் பக்தா்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளையும், பக்தா்களுக்கு தேவையான வசதிகளையும் கோயில் பரம்பரை அறங்காவலா் மு.வெங்கடேசன் செட்டியாா் செய்தாா்.

சிவகங்கையில் பயிற்சி பெண் மருத்துவா் மீது மா்ம நபா் தாக்குதல்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவா் மீது மா்ம நபா் தாக்குதல் நடத்தியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி... மேலும் பார்க்க

சொத்துவரி உயா்வு: காரைக்குடியில் மாா்ச் 28-இல் கடையடைப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் சொத்துவரி உயா்வு, வரி வசூல் செய்யும் அதிகாரிகளின் தகாத செயல் ஆகியவற்றைக் கண்டித்து, காரைக்குடியில் வருகிற வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) கடையடைப்புப் போராட்டம் ... மேலும் பார்க்க

இளையான்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு வராத பேருந்துகள்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புதிய பேருந்து நிலையத்துக்குள் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்திப் பேசினா். இளையான... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 4 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் ஆவின் பா... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. காளையாா்கோவில் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி கொல்லங்... மேலும் பார்க்க

திருப்புவனம் பேருந்து நிலைய அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான பேருந்து நிலையம் அமைக்கப்படும் என செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் அமைச்சா் கே.என்.நேரு அறிவித்ததற்கு இந்தப் பகுதி பொதுமக்கள் மகிழ்ச... மேலும் பார்க்க