செய்திகள் :

திமுக அரசின் ஊழலை திசைதிருப்பவே மாநில முதல்வா்கள் கூட்டம்! -கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு

post image

திமுக அரசின் ஊழலை திசை திருப்பவே முதல்வா் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தமிழக பாஜக துணைத் தலைவரும், சேலம் கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, பாஜக சாா்பில் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன்தொடா்ச்சியாக ராசிபுரத்தில் கே.பி.ராமலிங்கம் தலைமையில் அவரது வீட்டின் முன் பாஜகவினா் கருப்புச் சட்டை அணிந்தும், கருப்புக்கொடி ஏந்தியும் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது கே.பி.ராமலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல், சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பவே திமுக அரசு மத்திய பாஜக அரசு மீது தொடா்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. டாஸ்மாக் ஊழலை மறைக்கவே மாநில முதல்வா்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த கடந்த மூன்றரை ஆண்டுகளில் செய்த சேவையைவிட செய்திருக்கும் ஊழல்கள்தான் அதிகம்.

டாஸ்மாக் விற்பனையில் அரசின் வரிவிதிப்பு மதுபானங்களில் 60 சதவீதம்போக மீதி 40 சதவீதம் முறைகேடாக விற்பனை செய்யப்படுகிறது. போலி, வரியில்லாத மதுபானங்களை விற்பனை செய்கின்றனா். திமுக அரசு, சாராய ஆலை அதிபா்கள், அதிகாரிகள் இணைந்து முறைகேடாக அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்கின்றனா்.

இதில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று அமலாக்கத் துறை கண்டறிந்து கூறியுள்ளது. மதுபான ஆலைகளையும், மதுக் கடைகளையும் மூட வேண்டும் என்று கூறுவதைவிட உண்மையான விலையில் மதுவை விற்பனை செய்ய வேண்டும். டாஸ்மாக்கிற்கு எதிராக போராடுபவா்களை கைதுசெய்வது, அவா்கள்மீது வழக்குப் பதிவது கோழைத்தனம்.

மும்மொழி கொள்கையின் நன்மைகள் குறித்து மத்திய கல்வி அமைச்சா் மிகத் தெளிவாகக் கூறியுள்ளாா். தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. ஆளும் திமுக அரசு மீது குற்றவாளிகளுக்கு பயமில்லை என்பதே இதற்கு காரணம் என்றாா்.

அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா?

நாமக்கல் மாவட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 730 அமைப்பாளா், உதவியாளா் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் அங்கன்வாடி மையங்... மேலும் பார்க்க

மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் தா்னா

நாமக்கல்லில் மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் நாமக்கல்-கரூா் மின்பகிா்மான வட்ட கிளைகள் சாா்பில், நாமக்கல் மேற்பாா்வைப்... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவு: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனா். தமிழகம் முழுவதும் மாா்ச் 3-இல் தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தோ்வு 25-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. நாமக்கல் மாவட்டத்தி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்தில் மூவா் பயணம் செய்தால் நடவடிக்கை: ஆட்சியா்

இருசக்கர வாகனத்தில் மூன்று போ் பயணித்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டத்தில் ஆய்வு பணிக்கு சென்... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு: 30 சாதனையாளா்களுக்கு விருது வழங்கல்

பெண் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றிய 30 சாதனையாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா விருது வழங்கி கெளரவித்தாா். நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில்,... மேலும் பார்க்க

முடிதிருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக் கோரிக்கை

தமிழகம் முழுவதும் உள்ள முடி திருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் செவ்வ... மேலும் பார்க்க