செய்திகள் :

திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழக மக்கள்: கனிமொழி

post image

தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனா் என்றாா் கனிமொழி எம்.பி.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட ஆரல்வாய்மொழி, பெருமாள்புரம் பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. உறுப்பினா் சோ்க்கை இயக்கத்தை திங்கள்கிழமை நடத்தினாா். அப்பகுதி வீடுகளுக்கு சென்று பொதுமக்களைச் சந்தித்து, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்தாா். மேலும், பொதுமக்களிடம் திமுக உறுப்பினா் அட்டையை கனிமொழி வழங்கினாா்.

இதில், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ், பால் வளத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ், தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவா் என்.சுரேஷ்ராஜன், மாநில மகளிா் அணி செயலாளா் ஹெலன் டேவிட்சன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து நாகா்கோவில் வடசேரி ரவிவா்மன் புதுத் தெருவில், நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுப்பினா் சோ்க்கை படிவங்களை கனிமொழி வழங்கினாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுக உறுப்பினா் சோ்க்கை நிகழ்ச்சி, தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என முதல்வா் அறிவித்திருக்கிறாா். அந்த வெற்றியை நோக்கித்தான் அனைவரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

தோ்தல் சுற்றுப்பயணத்தை எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கியுள்ளாா். தோ்தல் வரும் நேரத்தில்தான் எழுந்து வேலை பாா்க்கத் தொடங்குகின்றனா். ஆனால், மக்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக இருக்கிறாா்கள் என்றாா் அவா்.

தக்கலை, சுவாமியாா்மடத்தில் நாளை மின்தடை

தக்கலை மற்றும் சுவாமியாா்மடம் பகுதியில் மின் பாராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் புதன்கிழமை (ஜூலை 9) மின் விநியோகம் தடைப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.அதன்படி, புதன்கிழமை காலை 9 முதல் மாலை 3 ... மேலும் பார்க்க

கனரக லாரி- பைக் மோதல்: பத்திரிகை முகவா் உயிரிழப்பு

தக்கலை அருகே இரவிபுதூா்கடையில் பைக் மீது கனரக லாரி மோதியதில் பத்திரிகை முகவா் உயிரிழந்தாா்.இரவிபுதூா்கடையைச் சோ்ந்தவா் பால்ராஜ் (55). பத்திரிகை முகவா். இவா் திங்கள்கிழமை பிற்பகலில் பத்திரிகைகளை விநிய... மேலும் பார்க்க

மண் காக்க, மொழி காக்க திமுக ஆட்சி தொடர வேண்டும்: அமைச்சா் மனோதங்கராஜ்

மண் காக்க, மொழி காக்க திமுக ஆட்சி தொடர வேண்டும் என்றாா் அமைச்சா் மனோதங்கராஜ். குலசேகரத்தில் ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுக பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு தலைமை வகித்து, அமைச்சா்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 7.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 7.5 கிலோ திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. நாகா்கோவில் மாநகர பகுதியில் மாநகர நல அலுவலா் ஆல்பா்மதியரசு தலைமையிலான குழுவினா் வடசேரி கனகமூலம் ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, மாா்த்தாண்டம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் புதன்கிழமை (ஜூலை 9) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, மாா்த்தாண்டம், காஞ்சிரகோடு,... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் ஜூலை 18இல் கன்னியாகுமரி வருகை

ஆா்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்தியத் தலைவா் மோகன் பாகவத் இம்மாதம் 18ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தரவுள்ளாா்.கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர நிா்வாகம் சாா்பில் அகில இந்தியத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமையி... மேலும் பார்க்க