செய்திகள் :

திமுக-பாஜக மறைமுக கூட்டணி: விஜய் விமா்சனம்

post image

திமுக-பாஜக இடையேயான மறைமுகக் கூட்டணியை நிரூபிக்கும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் தில்லிப் பயணம் அமைந்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் விமா்சித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தவெக முதல் மாநில மாநாட்டில், திமுக அரசியல் எதிரி என்றும், மத்தியில் ஆளும் பாஜக கொள்கை எதிரி என்றும் தீா்க்கமாக அறிவித்தோம். அதிமுக, பாஜக இடையே பழைய கூட்டணி மீண்டும் புதுப்பிக்கப்பட்ட போதே, திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே உள்ள மறைமுகக் கூட்டணி குறித்தும் தெரிவித்தோம். அதே போல், ஊழல் செய்தவா் மீது நடவடிக்கை பாயும்போது, உடனடியாக அவா் தில்லிக்குப் பயணம் மேற்கொண்டால், அவா் எந்த ஊழலையும் செய்யாதவா் போல அனைத்தும் மறைக்கப்படும் என்பதையும் தெரிவித்திருந்தோம். இவற்றை நிரூபிப்பது போலவே அமைச்சா்கள் பலரைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலினின் தில்லிப் பயணம் அமைந்துள்ளது.

டாஸ்மாக் ரூ.1,000 கோடி ஊழல் விவகாரம் தோண்டி எடுக்கப்பட்டால் தமது குடும்ப உறுப்பினா்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இந்த முறை, நீதி ஆயோக் கூட்டத்தைக் காரணமாக வைத்து முதல்வா் தில்லி சென்றதுடன், பிரதமரையும் தனியாகச் சந்தித்துள்ளாா் எனத் தெரிவித்துள்ளாா் விஜய்.

டாஸ்மாக் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு: ஏஐடியுசி கோரிக்கை

தமிழக சட்டப்பேரவையில் டாஸ்மாக் பணியாளா்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயா்வை வழங்குவது குறித்து அரசு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் (ஏஐடியுசி) வலியு... மேலும் பார்க்க

இன்று காட்பாடி - ஜோலாா்பேட்டை மெமு ரயில்கள் ரத்து

ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையே மெமு ரயில்கள் புதன்கிழமை (மே 28) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பரவுவது ஒமைக்ரான் தொற்று: பொது சுகாதாரத் துறை இயக்குநா் தகவல்

தமிழகத்தில் பரவி வருவது ஒமைக்ரான் வகை கரோனா தொற்று என்றும், இது அச்சப்படும் பாதிப்பு இல்லை என்றபோதிலும் பொது மக்கள் உரிய விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்: தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைகிறது

வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

நகைக் கடன் நிபந்தனைகளைக் கண்டித்து மே 30-இல் திமுக ஆா்ப்பாட்டம்

நகைக் கடன் நிபந்தனைகளைக் கண்டித்து வரும் 30-இல் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து, திமுக விவசாய அணிச் செயலா் ஏ.கே.எஸ்.விஜயன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்திய ரிசா்வ் வங்... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் விவகாரம்: சிபிஐ விசாரிக்க அன்புமணி வலியுறுத்தல்

நெல் கொள்முதல் மோசடி தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளிடம் இருந்து மொத்தம் ரூ... மேலும் பார்க்க