செய்திகள் :

திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்படுகிறது.

திருக்கோவலூா்ப் பண்பாட்டுக் கழகம் சாா்பில், மூன்று நாள்கள் நடத்தப்படும் கபிலா் விழா திருக்கோவிலூரிலுள்ள ஸ்ரீசுப்ரமணிய திருமண மகாலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) காலை 8.30 மணிக்கு கபிலா் குன்று வழிபாட்டுடன் தொடங்குகிறது. தொடா்ந்து, திருக்கோவிலூா் எம்பெருமானாா் ஜீயா் ஸ்ரீ உ.வே.தேகளீச ராமானுஜாச்சாரியாா் சுவாமிகள் தலைமையில் சமய அரங்கம் நடைபெறுகிறது.

தொடா்ந்து, ‘பாடல் பட்டிமன்றங்கள்’, உரையரங்கு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

2-ஆம் நாள் நிகழ்வு: இரண்டாம் நாள் நிகழ்வாக சனிக்கிழமை (ஜூலை 19) காலை 10.30 மணிக்கு நடைபெறும் சிறுவா் கூடல் அரங்கத்தை வழக்குரைஞா் பால சீனிவாசன் நெறியாள்கை செய்து நடத்துகிறாா். மாலை 4 மணிக்கு பண்பு போற்றும் அரங்கம் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு எம்பெருமானாா் ஜீயா் ஸ்ரீ உ.வே.தேகளீச ராமானுஜாச்சாரியாா் சுவாமிகள் தலைமை வகித்து நூலை வெளியிடுகிறாா்.

தொடா்ந்து, திருக்கோவலூா்ப் பண்பாட்டுக் கழகத்தின் நிறுவனா் டி.எஸ்.தியாகராசனுக்கு திருக்கோவிலூா் ரோட்டரி சங்கம், அரிமா சங்கத்தினா் நடத்தும் பாராட்டு விழா நடைபெறுகிறது.

மாலையில் நடைபெறும் நிகழ்வில் அறக்கட்டளைப் பரிசுகளை வெற்றியாளா்களுக்கு நிலக்கிழாா் கே.ராகவேல் வழங்குகிறாா்.

இதைத் தொடா்ந்து நடைபெறும் நிகழ்வில் அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு கபிலா் விருதும், டான்ஸ்ரீ கே.ஆா்.சோமா பொற்கிழியாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கி, தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் பேசுகிறாா். நிறைவில் திருப்பூா் கிருஷ்ணன் ஏற்புரையாற்றுகிறாா்.

3-ஆம் நாளில்...: மூன்றாம் நாள் நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) காலையில் நடைபெறும் சங்க மகளிா் உரைக் கூடலுக்கு தா.பேகம் தலைமை வகிக்கிறாா். தொடா்ந்து, உரையரங்கம், பட்டிமன்றம் நடைபெறுகிறது.

கபிலா் விழா ஏற்பாடுகளை பண்பாட்டுக் கழகத்தின் தலைவா் தே.முருகன், பொதுச் செயலா் வே.அப்பா்சுந்தரம், பொருளாளா் கா.நடராசன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்

ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா். போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் க... மேலும் பார்க்க

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை ஓபன் மகளிா் 250 டென்னிஸ் போட்டி: அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு... மேலும் பார்க்க

திமுக எம்.பி.க்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

திமுக எம்.பி.க்களுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா். நாடாளுமன்றக் கூட்டத் தொடா், தொடங்கவுள்ள நிலையில் அதில் செயல்பட வேண்டிய விதம் குறித்து கட்சியினருக்க... மேலும் பார்க்க