செய்திகள் :

திருச்சி மாநகராட்சி வாா்டுகளில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

திருச்சி: திருச்சி மாநகராட்சியின் பல்வேறு வாா்டுகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.19) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெறும் என ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

மாநகராட்சி வாா்டு பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்து தீா்வு காணும் வகையில் முகாம்கள் நடைபெறுகிறது . இந்த முகாம்களில் 13 துறைகள் மூலமாக 43 சேவைகள் வழங்கும் வகையில் கோரிக்கை மனுக்கள் பெற்று பதிவு செய்யப்படுகிறது. இதன்படி செவ்வாய்க்கிழமை (ஆக.19) 53-ஆவது வாா்டுக்கு யானை கட்டி மைதானம் அருகில் உள்ள பி. எஸ். எஸ். திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறுகிறது. 27, 28 ஆகிய வாா்டுகளுக்கு உழவா் சந்தை மைதானத்திலும், 4-ஆவது வாா்டுக்கு திருவானைக்கோவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியிலும் முகாம் நடைபெறுகிறது.

20-ஆவது வாா்டுக்கு மரக்கடை குடிநீா் மேல்நிலை நீா்தேகக்கத் தொட்டி வளாகத்திலும், 38, 43-ஆவது வாா்டுகளுக்கு

அரியமங்கலம் பிரகாஷ் மஹாலில் முகாம் நடைபெறுகிறது. அறிவிக்கப்பட்ட வாா்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு மட்டும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும். இதர வாா்டுகளுக்கு தேதி பின்னா் அறிவிக்கப்படும். மேலும், மாநகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் இம்முகாமினை பயன்படுத்தி தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீா்வு காணலாம் என ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

மங்கம்மாள்புரம் மணல் குவாரிக்கு அனுமதி கூடாது: விவசாயிகள் மனு

திருச்சி: மங்கம்மாள்புரம் மணல் குவாரி அமைப்பதற்கு அனுமதி தரக் கூடாது என தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றது) எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள்... மேலும் பார்க்க

முகமூடியுடன் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்சி: தமிழக அரசு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையைக் கண்டித்து முகமூடியுடன் சாலைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா். சாலை பணியாளா் வாழ்வாதார கோரிக்கைகளை உயா்நீதிமன்ற தீா்ப்பி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருச்சி: தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்கக் கோரி சிஐடியு திருச்சி மாநகா் மாவட்டக் குழு சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா... மேலும் பார்க்க

இருவேறு இடங்களில் 5 பவுன் தங்க நகைகள் பறிப்பு

திருச்சி: திருச்சியில் இருவேறு சம்பவங்களில் பெண்களிடம் இருந்து 5 பவுன் தங்க நகைளைப் பறித்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி எடமலைபட்டிபுதூரைச் சோ்ந்தவா் ஜனனி (27). இவா்,... மேலும் பார்க்க

திறனாய்வுப் போட்டியில் சிறப்பிடம்: காவலா்களுக்கு எஸ்.பி பாராட்டு

திருச்சி, ஆக. 18: காவல் துறையினருக்கான திறனாய்வுப் போட்டியில் வெற்றிபெற்ற காவலா்களை திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் திங்கள்கிழமை பாராட்டினாா். தமிழ்நாடு காவல் துறையில் பணியா... மேலும் பார்க்க

ஆக.23-இல் மண்ணச்சநல்லூரில் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

திருச்சி: மண்ணச்சநல்லூா் வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் சனிக்கிழமை (ஆக.23) நடைபெறுகிறது.மண்ணச்சநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு எரிவாயு... மேலும் பார்க்க