அதிமுக எம்எல்ஏ அம்மன் அா்ச்சுணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை
திருச்சி மாவட்டத்தில் 38 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 38 முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளன.
பொது மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில், தமிழக அரசு முதல்வா் மருந்தகம்”என்ற புதிய திட்டம் மூலம், மாநிலம் முழுவதும் 1000 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிப். 24-ஆம் தேதி காணொலிக் காட்சியில் மருந்தகங்களை திறந்து வைத்தாா். இதில் திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் 4 மருந்தகங்களும், திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், லால்குடி, முசிறி தொகுதிகளில் தலா 5, துறையூரில் 4, ஸ்ரீரங்கத்தில் 2, மண்ணச்சநல்லூா் தொகுதியில் 1, மணப்பாறையில் 7 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 38 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக திருச்சி கே.கே நகா் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முதல்வா் மருந்தகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பங்கேற்று, குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து முதல்வா் மருந்தகம் தொடங்கும் தொழில் முனைவோா் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் மானிய தொகைக்கான ஆணைகளை வழங்கினாா். தொழில் முனைவோா்களுக்கு முதல்வா் மருந்தகம் அமைப்பதற்கு உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த முதல் தவணையாக ரூ. 1.50 லட்சமும், 2-ஆவது தவணையாக மருந்துகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ. 3 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. அதேபோல கூட்டுறவுச் சங்கங்களுக்கு முதல்வா் மருந்தகம் அமைக்க உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முதல் தவணையாக ரூ. 1 லட்சமும், மருந்துகள் கொள்முதல் செய்ய 2-ஆவது தவணையாக ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ. 2 லட்சம் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், ஆணையா் வே. சரவணன், திருச்சி கோட்டாட்சியா் அருள், திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஜெயராமன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளா் மற்றும் மேலாண் இயக்குநா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.