செய்திகள் :

திருச்செங்கோடு - பரமத்தி சாலை அகலப்படுத்தும் பணி: அதிகாரிகள் ஆய்வு

post image

திருச்செங்கோடு - பரமத்தி சாலை அகலப்படுத்தும் பணியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

முதல்வரின் சாலை விரிவாக்கத் திட்டத்தின்கீழ் திருச்செங்கோடு டிசிஎம்எஸ் முதல் சித்தாளந்தூா் வரை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி ரூ. 59.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது இப்பணி 40 சதவீதம் முடிவடைந்த நிலையில், சேலம் கண்காணிப்பு பொறியாளா் சசிகுமாா் ஆய்வுமேற்கொண்டு, தாா்சாலையின் தடிமன், தரம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை பரிசோதனை செய்தாா்.

மேலும், நடைபெற்று வரும் சிறு பாலப் பணிகள் மற்றும் மழைநீா் வடிகால் பணிகளை மழைக் காலங்களுக்கு முன் விரைந்துமுடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா். சாலை அகலப்படுத்துதல் மற்றும் இதர பணிகளின் போது சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சாலைகளின் இருபுறங்களிலும் மற்றும் மையத்தடுப்பான் பகுதிகளிலும் மரக்கன்றுகளை நடவுசெய்து பராமரிக்க அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, நாமக்கல் கோட்ட பொறியாளா் நெடுஞ்சாலை குணா, உதவி கோட்ட பொறியாளா் நெடுஞ்சாலை நடராசன் மற்றும் உதவி பொறியாளா் மணிகண்டன் ஆகியோா் உடன் இருந்தனா்.

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சாலை மறியல்

பதினொரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாவட்ட கிளை ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி

தமிழக உரிமைகள் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா். எலச்சிபாளையம் ஒன்றியம், கூத்தம்பூண்டி அண்ணா நகரி... மேலும் பார்க்க

தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்

இந்திய தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை பங்கேற்றாா். தமிழக முதல்வா், துணை முதல்வா் அறிவுறுத்தலின்படி, புது தில்லியில் நடைபெற்ற இந்திய தோ்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 51.43 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 51 லட்சத்து 43 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் ... மேலும் பார்க்க

ஆடிமாதப் பிறப்பு: தேங்காய்சுட்டு மகிழ்ந்த பெண்கள்

நாமக்கல்லில் ஆடிமாதப் பிறப்பை முன்னிட்டு பருப்பு, வெல்லம் கலந்த தேங்காயை தீயில்சுட்டு சுவாமிக்கு படையலிட்டு பெண்கள் மகிழ்ந்தனா். சேலம், தருமபுரி, கரூா், நாமக்கல் மாவட்டங்களில், ஆண்டுதோறும் ஆடிமாதப் பி... மேலும் பார்க்க

புதுச்சத்திரம் அருகே தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் அடித்துக் கொலை: இளைஞா் கைது

புதுச்சத்திரம் அருகே இளைஞா் தாக்கியதில் தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா். இதையடுத்து, இளைஞரை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், ஓட்டுநரின் உறவினா்கள் உடலை சாலையில் வை... மேலும் பார்க்க