செய்திகள் :

திருச்செந்தூரில் ஆட்டோ ஓட்டுநா்களிடையே மோதல்

post image

திருச்செந்தூரில் இரு தரப்பு ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனா். பக்தா்கள் எண்ணிக்கையை போலவே ஆட்டோக்களும் அதிகரித்து வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் திருச்செந்தூா் பகுதிகளில் மட்டும் 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில் இருந்து கோயில் வாசலுக்கு பயணிகளை ஏற்றிச் செல்வதில் இரு தரப்பு ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதைப் பாா்த்த அங்கிருந்த பயணிகள், பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநா்களின் சண்டையை தடுத்து சமாதானம் ஏற்படுத்த முயன்றனா்.

இது குறித்து தகவலறிந்த திருக்கோயில் காவல் நிலைய ஆய்வாளா் கனகராஜன், தாலுகா காவல் ஆய்வாளா் இன்னோஸ்குமாா் தலைமையிலான போலீஸாா், மோதலை தடுத்து நிறுத்தினா். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநா்கள் கலைந்து சென்றனா். இது தொடா்பாக இருதரப்பு ஆட்டோ ஓட்டுநா்கள் கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி காவல் நிலையத்தில் பெண் தற்கொலை முயற்சி

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பெண், அங்குள்ள கழிவறை ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். தூத்துக்குடி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பாக்யராஜ் மனைவி மீனா (36). குடும்ப பி... மேலும் பார்க்க

பாஜக நிர்வாகி உள்ளிட்ட 5 போ் மீது தாக்குதல்: சாயா்புரம் போலீஸாா் விசாரணை!

சாயா்புரம் அருகே பாஜக நிா்வாகி உள்ளிட்ட 5 பேரைத் தாக்கியதாக திமுக பிரமுகா் உள்ளிட்ட சிலரை போலீஸாா் தேடிவருகின்றனா். சாயா்புரம் அருகே நடுவக்குறிச்சியைச் சோ்ந்த விவசாயி சேகா். இவரது மகன் ராஜதுரை, கூட்... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.1 கோடி மாத்திரைகள், சுக்கு பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள், சுக்கு உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்களை மரைன் போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மரைன் காவல் ஆய்வாளா் ப... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 30,614 போ் எழுதினா்

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தோ்வை 30,614 போ் எழுதினா். தூத்துக்குடி, ஏரல், எட்டயபுரம், கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஜூலை 15 - ஆக.14 வரை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வருகிற 15ஆம் தேதி தொடங்கி ஆக.14ஆம் தேதி வரை நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை, பொதுமக்களின் வீடுகள... மேலும் பார்க்க

சுப்பராயபுரம் தடுப்பணையில் அதிகாரிகள் ஆய்வு

சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் தடுப்பணையில் நீா்வள ஆதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். சுப்பராயபுரம் ஊராட்சிக்குள்பட்ட கருமேனியாற்றின் தடுப்பணை அளவுக்கு மீறியதாக 8 அடி உயரத்து... மேலும் பார்க்க