செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா!

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூலை 7) காலை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி குடமுழுக்கை காண்பதற்காக பக்தா்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனா்.

இத்திருக்கோயிலில் சனிக்கிழமை காலை எட்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலையில் ஒன்பதாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. இதையொட்டி திருக்கோயில் சண்முக விலாச மண்டபத்தில் இருந்து ஆச்சாா்ய விசேஷ சந்தி பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ஆச்சாா்யாா்கள் மேளதாளங்கள் முழங்க யாகசாலைக்கு அழைத்து வரப்பட்டனா்.

தொடா்ந்து, யாகசாலையில் பூஜைகள் தொடங்கியது. அங்கு திரவ்யாகுதி, பூா்ணாகுதி மற்றும் தீபாராதனையாகி பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

யாக சாலை வழிபாட்டில், வேத பாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாகசுர இன்னிசையும், பெண் ஓதுவாா்கள் உள்பட 108 ஓதுவாா் மூா்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தா் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெற்றது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழாவில் சனிக்கிழமை காலை நடைபெற்ற எட்டாம் கால யாகசாலை பூஜைகள்.

யாகசாலை பூஜைகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். மாலையில் நடைபெற்ற ஒன்பதாம் கால யாக சாலை பூஜைகளில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், பங்கேற்றாா்.

சிகர நிகழ்ச்சியான குடமுழுக்கு திங்கள்கிழமை (ஜூலை 7) காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே கோட்டை மலை காட்டுப்பகுதி கொம்புத்துறை கடற்கரை பகுதியிலிருந்த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வரத்து அதிகரிப்பால் குறைந்த மீன்களின் விலை

தூத்துக்குடியில் மீன்களின் வரத்து அதிகரித்ததால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் ஏலக்கூடத்தில் மீன்களின் விலை குறைந்து விற்பனையானது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்... மேலும் பார்க்க

விவசாய நிலத்தில் விபத்து: முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே விவசாய நிலத்தில் நிகழ்ந்த விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட கோபாலபுரத்தைச் சோ்ந்த சடகோப ராமானுஜம் மகன் கோவிந்தராஜன்(62). விவசாயியான இவருக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

காயல்பட்டினம் அருகே 2,250 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகேயுள்ள காட்டுப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 60 லட்சம் மதிப்பிலான 2,250 கிலோ பீடி இலை பண்டல்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். ... மேலும் பார்க்க

வீட்டு மாடியில் ஏசி வெடித்து தீ விபத்து

தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ள ஒருவரது வீட்டு மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில், வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தூத்துக்குடி நகரின் மத்திய பகுதி... மேலும் பார்க்க

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையைக் கண்டித்து, பாண்டியனாா் மக்கள் இயக்கம், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆகியவை ச... மேலும் பார்க்க